Friday 18 October 2013

இறைவனே அருள்வாய்!


ஏழையாய் வாழ விரும்புகின்றேன் ஆனால்
இரந்துண்டு வாழ விரும்ப வில்லை

கோலச் சிறப்பை விரும்பவில்லை ஆனால்
குடிச்சிறப் பிழக்கவும் விரும்ப வில்லை

ஞாலம் புகழ்ந்திடும் வாழ்வுவேண்டாம் ஆனால்
நயந்தெவர் முன்பும் நிற்க வேண்டாம்

சீலமும் அன்பும் சிறுமையு மற்ற
தெளிவுள வாழ்வினை வேண்டி னேன்தா!

                                                                - கவி. கா.மு. ஷெரீஃப்

நூல் : கவி. கா.மு. ஷெரீஃப் கவிதைகள்
பக்கம் : 464

No comments:

Post a Comment