Thursday 15 March 2018

இதுவும் கடந்து போகும்!

ஒரு ராஜா ஒரு முறை நாட்டிலுள்ள அறிஞர்களை ஒன்று கூட்டி, தான் சோகமாக இருக்கும்போது மகிழ்ச்சியை வரவழைக்கக்கூடிய ஒரு வாசகத்தை ஒரு மோதிரத்தில் எழுதித் தருமாறு ஆணையிட்டார்.

அறிஞர்கள் ஒன்றுகூடி ஆலோசித்து ஒரு வாசகத்தை ஒரு மோதிரத்தில் பொறித்து ராஜாவிடம் பணிவாகக் கொடுத்தனர்.

ராஜா மோதிரத்தில் பொறிக்கப்பட்ட வாசகத்தைப் படித்தார். அவர் முகம் பிரகாசித்தது. அந்த வாசகம் என்ன தெரியுமா?

“இதுவும் கடந்து போகும்!”

ஆம்! என்ன சோகம் வந்தாலும் அதவும் நம்மைக் கடந்து போய், அடுத்த ஒரு கணத்தில் அகமகிழ்ச்சி வரத்தான் செய்யும். ஆழ்ந்த கவலையில்,கொடும் துன்பத்தில், கடும் சிக்கலில் சிக்கியுள்ளவர்கள் “இதுவும் கடந்து போகும்!” என்ற எண்ணத்தை மனதினுள் நிறைத்தால் துன்பமும், சிக்கலும், கவலையும் காணாமற்போகும். வாழ்க்கை என்பது ஒரு சக்கரம்தானே!

“ஆதலின் நிச்சயமாக துன்பத்துடன் இன்பம் இருக்கிறது. நிச்சயமாக துன்பத்துடன் இன்பம் இருக்கிறது.” (திருக்குர்ஆன் 94: 5, 6)

அன்றாடம் ஓத வேண்டிய அத்தியாவசிய துஆக்கள்

தூக்கத்திலிருந்து விழித்தவுடன் ஓதும் துஆ

الحَمْـدُ لِلّهِ الّذي أَحْـيانا بَعْـدَ ما أَماتَـنا وَإليه النُّـشور

அல்ஹம்து லில்லாஹில்லதீ அஹ்யானா பஃத மா அமாதனா வஇலைஹின் னுஷூர்.

பொருள்: நம்மை மரணிக்கச் செய்த பின் நமக்கு உயிர் கொடுத்தவனாகிய அல்லாஹ்விற்கே புகழ் அனைத்தும் உரித்தாகுக!

ஆடை அணிகின்ற போது ஓதும் துஆ

الحمدُ للهِ الّذي كَساني هذا (الثّوب) وَرَزَقَنيه مِنْ غَـيـْرِ حَولٍ مِنّي وَلا قـوّة

அல்ஹம்து லில்லாஹில்லதீ கஸானீ ஹாத (ஸ்ஸவ்ப) வரஸகனீஹி மின் ஃகைரி ஹவ்லின் மின்னீ வலா குவ்வதின்.

பொருள்: இ(ந்த ஆடையானதை (அவனுடைய உதவியோடு) என்னிடமிருந்து எவ்வித பிரயாசையும், எவ்வித சக்தியுமின்றி எனக்கு அணிவித்து, அதனை அளித்தவனுமாகிய அல்லாஹ்விற்கே எல்லாப் புகழும் உரித்தாகுக!

கழிவறையில் நுழைகின்ற போது ஓதும் துஆ

بِسْمِ الله ) اللَّهُمَّ إِنِّي أَعُوْذُ بِكَ مِنَ الْخُبُثِ وَالْخَبَائِثِ)

(பிஸ்மில்லாஹி) அல்லாஹும்ம இன்னீ அஊது பிக மினல் ஃகுப்ஸி வல் ஃகபாயிஸ்

பொருள்: (அல்லாஹ்வின் பெயரால் பிரவேசிக்கிறேன்) யா அல்லாஹ்! ஆண் ஷைத்தான் பெண் ஷைத்தான்களின் தீமையிலிருந்து உன்னைக் கொண்டு நிச்சயமாக நான் பாதுகாவல் தேடுகிறேன்.

கழிவறையிலிருந்து வெளியேறும் போது ஓதும் துஆ

غُفْـرانَك
குஃப்ரானக.

பொருள்: உன்னிடம் பாவம் பொறுத்தருள வேண்டுகிறேன்.

உளூ செய்யுமுன் கூறப்பட வேண்டிய துஆ

بِسْمِ الله
பிஸ்மில்லாஹ்.

பொருள்: அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன்.

உளூ முடிந்து பின் கூறப்படும் துஆ

أَشْهَدُ أَنْ لا إِلَـهَ إِلاّ اللهُ وَحْدَهُ لا شَريـكَ لَـهُ وَأَشْهَدُ أَنَّ مُحَمّـداً عَبْـدُهُ وَرَسـولُـه
اللّهُـمَّ اجْعَلنـي مِنَ التَّـوّابينَ وَاجْعَـلْني مِنَ المتَطَهّـرين الله أكبر

அஷ்ஹது அன்லாஇலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லாஷரீக லஹு வஅஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹு வரஸுலுஹு. அல்லாஹும் மஜ்அல்னீ மினத்தவ்வாபீன வஜ்அல்னீ மினல் முததஹ்ஹிரீன்.

பொருள்: வணங்கப்படுபவன் அல்லாஹ்வையன்றி வேறு எவரும், எதுவும் இல்லை, அவன் தனித்தவன். அவனுக்கு இணையில்லை என்று நான் சாட்சி கூறுகிறேன். இன்னும் நிச்சயமாக முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அவனுடைய (உயரிய) அடியார் மற்றும் அவனுடைய தூதர் என சாட்சி கூறுகிறேன். யா அல்லாஹ்! தவ்பா - பாவ மீட்சி பெற்றவர்களில் என்னை நீ ஆக்குவாயாக! பரிசுத்தமடைந்தவர்களிலும் என்னை நீ ஆக்குவாயாக!

வீட்டிலிருந்து புறப்படும் போது ஓதும் துஆ

بِسْمِ اللهِ ، تَوَكَّلْـتُ عَلى اللهِ وَلا حَوْلَ وَلا قُـوَّةَ إِلاّ بِالله

பிஸ்மில்லாஹி தவக்கல்து அலல்லாஹி வலா ஹவ்ல வலா குவ்வத இல்லா பில்லாஹ்.

பொருள்: அல்லாஹ்வின் பெயரால் புறப்படுகிறேன். என் காரியங்கனை முழுமையாக ஒப்படைத்து, அல்லாஹ்வின் மீது நம்பிக்கை வைத்து விட்டேன். மேலும், அல்லாஹ்வைக் கொண்டல்லாது (பாவத்திலிருந்து) திரும்புதலும், (நன்மையானவற்றைச் செய்வதற்கு) சக்தியுமில்லை.

வீட்டினுள் நுழையும் போது ஓதும் துஆ

بِسْـمِ اللهِ وَلَجْنـا، وَبِسْـمِ اللهِ خَـرَجْنـا، وَعَلـى رَبِّنـا تَوَكّلْـنا

பிஸ்மில்லாஹி வலஜ்னா, வ பிஸ்மில்லாஹி ஃகரஜ்னா, வஅலா ரப்பினா தவக்கல்னா.

பொருள்: அல்லாஹ்வின் பெயரால் நுழைந்தோம். அல்லாஹ்வின் பெயரைக் கொண்டே புறப்படுவோம். நம்முடைய இரட்சகனின் மீது (நம்முடைய காரியங்கனை முழுமையாக ஒப்படைத்து) நம்பிக்கையும் கொண்டிருக்கிறோம்.

மஸ்ஜிதில் நுழையும்போது ஓதும் துஆ

أَعوذُ باللهِ العَظيـم وَبِوَجْهِـهِ الكَرِيـم وَسُلْطـانِه القَديـم مِنَ الشّيْـطانِ الرَّجـيم،[ بِسْـمِ الله، وَالصَّلاةُ وَالسَّلامُ عَلى رَسولِ الله]، اللّهُـمَّ افْتَـحْ لي أَبْوابَ رَحْمَتـِك

அஊது பில்லாஹில் அழீம், வபி வஜ்ஹிஹில் கரீம், வஸுல்தானிஹில் கதீமி மினஷ் ஷைத்தானிர் ரஜீம்.

பொருள்: மகத்தான அல்லாஹ்வைக் கொண்டு, சங்கையான அவனுடைய முகம், பூர்வாங்கமான அவனுடைய அதிகாரம் ஆகியவற்றைக் கொண்டு தூக்கி எறியப்பட்ட ஷைத்தானின் தீங்கிலிருந்து நான் பாதுகாப்பு தேடுகிறேன்.

மஸ்ஜிதிலிருந்து வெளியேறுகின்ற போது ஓதும் துஆ

بِسمِ الله وَالصّلاةُ وَالسّلامُ عَلى رَسولِ الله، اللّهُـمَّ إِنّـي أَسْأَلُكَ مِـنْ فَضْـلِك، اللّهُـمَّ اعصِمْنـي مِنَ الشَّيْـطانِ الرَّجـيم

பிஸ்மில்லாஹி வஸ்ஸலாத்து வஸ்ஸலாமு அலா ரசூலில்லாஹ், அல்லாஹும்ம இன்னீ அஸ்அலுக மின் ஃபழ்லிக, அல்லாஹும் மஃஸிம்னீ மினஷ் ஷைத்தானிர் ரஜீம்.

பொருள்: அல்லாஹ்வின் பெயரால், அருளும் சாந்தியும் அல்லாஹ்வின் தூதரின் மீது உண்டாகுக! யா அல்லாஹ்! நிச்சயமாக நான், உன்னுடைய பேரருளிலிருந்து உன்னிடம் கேட்கிறேன். யா அல்லாஹ்! தூக்கியெறியப்பட்ட ஷைத்தானிலிருந்து என்னைப் பாதுகாப்பாயாக!