Thursday 15 March 2018

இதுவும் கடந்து போகும்!

ஒரு ராஜா ஒரு முறை நாட்டிலுள்ள அறிஞர்களை ஒன்று கூட்டி, தான் சோகமாக இருக்கும்போது மகிழ்ச்சியை வரவழைக்கக்கூடிய ஒரு வாசகத்தை ஒரு மோதிரத்தில் எழுதித் தருமாறு ஆணையிட்டார்.

அறிஞர்கள் ஒன்றுகூடி ஆலோசித்து ஒரு வாசகத்தை ஒரு மோதிரத்தில் பொறித்து ராஜாவிடம் பணிவாகக் கொடுத்தனர்.

ராஜா மோதிரத்தில் பொறிக்கப்பட்ட வாசகத்தைப் படித்தார். அவர் முகம் பிரகாசித்தது. அந்த வாசகம் என்ன தெரியுமா?

“இதுவும் கடந்து போகும்!”

ஆம்! என்ன சோகம் வந்தாலும் அதவும் நம்மைக் கடந்து போய், அடுத்த ஒரு கணத்தில் அகமகிழ்ச்சி வரத்தான் செய்யும். ஆழ்ந்த கவலையில்,கொடும் துன்பத்தில், கடும் சிக்கலில் சிக்கியுள்ளவர்கள் “இதுவும் கடந்து போகும்!” என்ற எண்ணத்தை மனதினுள் நிறைத்தால் துன்பமும், சிக்கலும், கவலையும் காணாமற்போகும். வாழ்க்கை என்பது ஒரு சக்கரம்தானே!

“ஆதலின் நிச்சயமாக துன்பத்துடன் இன்பம் இருக்கிறது. நிச்சயமாக துன்பத்துடன் இன்பம் இருக்கிறது.” (திருக்குர்ஆன் 94: 5, 6)

No comments:

Post a Comment