Tuesday 14 November 2023

புனிதத் தலமான அல் அக்ஸா மஸ்ஜிதின் முக்கியத்துவம்!

எல்லாம் வல்ல அல்லாஹ் தனது திருமறையில் சூரா பனீ இஸ்ராயீல் என்ற அத்தியாயத்தின் முதல் வசனத்தில் இவ்வாறு குறிப்பிடுகிறான்:

سُبْحٰنَ الَّذِىْۤ اَسْرٰى بِعَبْدِهٖ لَيْلًا مِّنَ الْمَسْجِدِ الْحَـرَامِ اِلَى الْمَسْجِدِ الْاَقْصَا الَّذِىْ بٰرَكْنَا حَوْلَهٗ لِنُرِيَهٗ مِنْ اٰيٰتِنَا‌ ؕ اِنَّهٗ هُوَ السَّمِيْعُ الْبَصِيْرُ‏

(அல்லாஹ்) மிகப் பரிசுத்தமானவன். அவன் தன் அடியாரை பைத்துல் ஹராமிலிருந்து (கபத்துல்லாஹ்விலிருந்து தொலைவிலிருக்கும் பைத்துல் முகத்தஸிலுள்ள) மஸ்ஜிதுல் அக்ஸாவிற்கு ஓரிரவில் அழைத்துச் சென்றான். (மஸ்ஜிதுல் அக்ஸாவின்) சுற்றெல்லைகளை நாம் பரக்கத் செய்திருக்கின்றோம். நம்முடைய அத்தாட்சிகளை அவருக்குக் காண்பிப்பதற்காக (அவ்வாறு அழைத்துச் சென்றோம்). நிச்சயமாக அவன் (யாவற்றையும்) செவியுறுவோனாகவும் பார்ப்போனாகவும் இருக்கின்றான்.

முதல் இறையில்லமான கஅபத்துல்லாஹ்வுக்கு அடுத்தபடியாக பூமியில் கட்டப்பட்ட இரண்டாவது இறையில்லம்தான் மஸ்ஜிதுல் அக்ஸா என்ற பைத்துல் முகத்தஸ்.

எம்பெருமானார் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:

“மூன்று மஸ்ஜித்களுக்கு நன்மையை நாடிப் பயணம் செய்யலாம். ஒன்று – மஸ்ஜிதுல் ஹராம். இரண்டாவது – மஸ்ஜிதுந் நபவி. மூன்றாவது – மஸ்ஜிதுல் அக்ஸா.”

மேலும் அல்லாஹ்வின் தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:

“மக்காவிலுள்ள மஸ்ஜிதுல் ஹராமில் தொழுபவருக்கு ஒரு லட்சம் மடங்கு நன்மைகள் கிடைக்கும். மதீனாவிலுள்ள மஸ்ஜிதுந் நபவியில் தொழுபவருக்கு ஆயிரம் மடங்கு நன்மைகள் கிடைக்கும். ஜெரூசலமிலுள்ள மஸ்ஜிதுல் அக்ஸாவில் தொழுபவருக்கு 500 மடங்கு நன்மைகள் கிடைக்கும்.”

முஸ்லிம்களின் முதல் கிப்லாவாக பைத்துல் முகத்தஸ் திகழ்ந்தது!

ஆம்! முஸ்லிம்கள் மக்காவிலிருந்து மதீனாவுக்கு ஹிஜ்ரத் செய்து வந்த பிறகு 16 அல்லது 17 மாதங்கள் மஸ்ஜிதுல் அக்ஸாவை நோக்கியே தொழுது வந்தார்கள்.

அண்ணலார் அவர்கள் ஒரு முறை மதீனாவிலுள்ள ஒரு மஸ்ஜிதில் அஸ்ர் தொழுது கொண்டிருந்த பொழுது அல்லாஹ்வின் கட்டளைப் படி தனது முகத்தை கஅபத்துல்லாஹ்வை நோக்கித் திருப்பினார்கள்.

இதனை இறைமறையில் அல் பகரா அத்தியாயத்தில் 144ஆவது வசனத்தில் இறைவன் இவ்வாறு கூறுகிறான்:

قَدْ نَرٰى تَقَلُّبَ وَجْهِكَ فِى السَّمَآءِ‌‌ۚ فَلَـنُوَلِّيَنَّكَ قِبْلَةً تَرْضٰٮهَا‌

فَوَلِّ وَجْهَكَ شَطْرَ الْمَسْجِدِ الْحَـرَامِؕ وَحَيْثُ مَا كُنْتُمْ فَوَلُّوْا وُجُوْهَكُمْ شَطْرَهٗ ‌ؕ

(நபியே!) நாம் உம் முகம் அடிக்கடி வானத்தை நோக்கக் காண்கிறோம். எனவே நீர் விரும்பும் கிப்லாவின் பக்கம் உம்மைத் திடமாக திருப்பி விடுகிறோம். ஆகவே நீர் இப்பொழுது (மக்காவின்) மஸ்ஜிதுல் ஹராம் பக்கம் உம் முகத்தைத் திருப்பிக் கொள்ளும். (முஸ்லிம்களே!) இன்னும் நீங்கள் எங்கிருந்தாலும் (தொழுகையின் போது) உங்கள் முகங்களை அந்த (கிப்லாவின்) பக்கமே திருப்பிக் கொள்ளுங்கள்.

இதனால் அந்த மஸ்ஜிதுக்கு “மஸ்ஜிதுல் கிப்லத்தைன்” என்று பெயர் வந்தது. அதாவது, இரண்டு கிப்லாக்களைச் சந்தித்த மஸ்ஜித் என்று பொருள்.

இவ்வாறுதான் மஸ்ஜிதுல் அக்ஸா முஸ்லிம்களுக்குப் புனிதத் தலமானது.

மஸ்ஜிதுல் அக்ஸாவுக்கு மாநபிகளார் நடத்திய ஒரு பயணத்தின் மூலம் அடுத்த கண்ணியம் கிடைத்தது. அதுதான் “இஸ்ரா“ பயணம்!

அதாவது, மதீனாவிலிருந்து பைத்துல் முகத்தஸுக்குச் சென்ற பயணத்திற்குத்தான் இஸ்ரா பயணம் என்று பெயர்.

அதன் பிறகு நடந்ததுதான் மிஃராஜ் பயணம்.

ஆம்! வல்ல இறைவன் தனது வலிமையைப் பறை சாற்றும் முகமாக தன் நேசத்திற்குரிய இறைத்தூதர் அவர்களை ஒரே இரவில் விண்ணுலகுக்கு அழைத்து, பின்னர் தொழுகையை அன்பளிப்பாக அளித்து அந்த இரவிலேயே திருப்பி அனுப்பிய அற்புதத்தை நிகழ்த்திக் காட்டிய பயணம்தான் மிஃராஜ் பயணம்.

வானவர்களின் தலைவர் ஹஸ்ரத் ஜிப்ரயீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அண்ணலாரை ‘புராக்’ என்ற வாகனத்தில் முதலில் மஸ்ஜிதுல் அக்ஸாவுக்கு அழைத்துச் சென்றார்.

இதனைத்தான் நான் முதலில் குறிப்பிட்ட பனீ இஸ்ராயீல் அத்தியாயத்தின் முதல் வசனத்தில் இறைவன் குறிப்பிடுகின்றான்.

அடுத்து அல்லாஹ் “அதன் சுற்றெல்லைகளை பரக்கத் செய்திருக்கின்றோம் என்று அதே வசனத்தில் கூறுகிறான்.

ஆம்! அல்லாஹ்வின் வாக்கு பொய்யாகாது. அல்லாஹ் அதனை பரக்கத் ஆக்கியே வைத்திருக்கின்றான்.

பலரும் எண்ணுவது போன்று பைத்துல் முகத்தஸ் என்பது ஒரே ஒரு மஸ்ஜிதன்று. அது சுமார் 27 ஏக்கர் சுற்றளவு கொண்ட ஒரு புனிதப் பகுதி. இதனுள் ஐந்து மஸ்ஜித்கள் இருக்கின்றன.

பைத்துல் முகத்தஸ் என்றதும் பரவலாக நாம் பார்க்கின்ற ஒரு படமுள்ள மஸ்ஜிதுக்குப் பெயர் “குப்பத் அல் ஸிஹ்ரா’‘. இதனை ஆங்கிலத்தில் Dome of the Rock என்றழைப்பார்கள்.

நபி சுலைமான் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் பெயரிலுள்ள ஒரு மஸ்ஜிதும் இங்கே உள்ளது. விண்ணுலகப் பயணம் மேற்கொள்வதற்கு முன் முத்து நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு அல்லாஹ் இன்னொரு கண்ணியத்தையும் அளித்தான். அதுதான் அல் அக்ஸாவில் அவர்கள் அத்தனை நபிமார்களுக்கும் தொழ வைத்தது!

ஆம்! அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அங்கே 1,24,000 நபிமார்களுக்கும் தலைமையேற்று தொழுகையை நடத்தினார்கள்.

பைத்துல் முகத்தஸ் வளாகத்தில் தூய நபிகளார் தொழ வைத்த இடம் என்று சொல்லப்படுகிற மிஹ்ராப் இன்றும் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளது. அதே போன்று ஹஸ்ரத் ஜிப்ரயீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அண்ணலாரை ஏற்றிச் சென்ற புராக் வாகனத்கைக் கட்டிப் போட்டார்கள் என்று சொல்லப்படுகின்ற இடத்தையும் அங்கே செல்பவர்கள் காணலாம்.

அல் அக்ஸா ஸ்ஜித் பழைய ஜெரூசலம் நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ளது. இது காலப்போக்கில் பலமுறை அழிக்கப்பட்டு, புனரமைக்கப்பட்டு, புதுப்பிக்கப்பட்டுள்ளது.

அல் அக்ஸா மஸ்ஜித் கண்டிப்பாக முஸ்லிம்களால் வெற்றி கொள்ளப்படும். இது ஏந்தல் நபிகளாரின் ஏற்றமிகு முன்றிவிப்பாகும். இதனை புஃகாரீ ஹதீஸ் கிரந்தத்தில் அவ்ஃப் இப்னு மாலிக் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கும் ஒரு நபிமொழியின் மூலம் நாம் அறியலாம். அவர் கூறுகிறார்:

தபூக் போரின் போது நபிவர்களிடம் நான் சென்றேன். அவர்கள் ஒரு தோல் கூடாரத்தில் இருந்தார்கள். அப்போது அவர்கள் என்னிடம், ‘மறுமை ஏற்படுவதற்கு முன்னர் ஆறு (முக்கிய) நிகழ்வுகள் ஏற்படும். அவற்றை எண்ணிக் கொள் என்று கூறிவிட்டு, எனது மரணம், பைதுல் முகத்தஸ் வெற்றி எனக் கூறினார்கள்.”

ஏந்தல் நபிகளாரின் ஏற்றமிகு இந்த முன்னறிவிப்பு உமர் ரழியல்லாஹு அன்ஹு அவர்களது ஆட்சிக் காலத்தில் நடந்தேறியது.

ஆம்! இரண்டாம் கலீஃபா  உமர் (ரழி) அவர்களின் ஆட்சியில் ஹிஜ்ரி 16ம் ஆண்டு, அதாவது கி.பி. 636ஆம் ஆண்டு முஸ்லிம்கள் அதனைக் கைப்பற்றினர்.

இந்த முன்னறிவிப்பு தூய நபிகளாரின் தூதுத்துவத்தின் உண்மைத் தன்மையையும், பைதுல் முகத்தஸ் முஸ்லிம்களது கையில் இருக்க வேண்டிய மஸ்ஜித் என்பதையும் உறுதி செய்கின்றது.

உமர் ரழியல்லாஹு அன்ஹு அவர்களின் காலத்திற்குப் பிறகு 11ஆம் நூற்றாண்டின் இறுதி வரை அது முஸ்லிம்களின் வசமே இருந்தது. அது பிறகு எதிரிகளின் கைகளில் சிக்கியது. சிலுவைப் போரின்பொழுது சிலுவைக்காரர்கள் அதனைக் கைப்பற்றி சுமார் 88 ஆண்டுகள் அவர்கள் வசம் வைத்திருந்தனர்.

இந்தக் காலக்கட்டத்தில்தான் அல் அக்ஸாவை மீட்டெடுக்க மாபெரும் வீரர் ஒருவர் உருவானார். அவர்தான் ஸுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி!

சிலுவைக்காரர்களின் கைகளில் கட்டுண்டு கிடந்த நம்முடைய புனித பூமிகளை மீட்டெடுப்பதையே ஸுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி அவர்கள் தனது வாழ்வின் இலட்சியமாகக் கொண்டிருந்தார். அதற்காகவே தன் வாழ்க்கை முழுவதையும் அர்ப்பணித்தார். அதே சிந்தனையிலேயே ஆழ்ந்திருந்தார்.

"மஸ்ஜிதுல் அக்ஸா சிலுவைக்காரர்களின் பிடியில் இருக்க நான் எப்படி சிரிக்க முடியும்? நான் எப்படி உணவையும் பானங்களையும் சுவைக்க முடியும்?" என்று அவர் அடிக்கடி கேட்டுக்கொண்டே இருப்பாராம்.

இறுதியில் அவர் தனது இலட்சியத்தை அடைந்தார்!

ஆம்! கிபி 1187ல் நடந்த ஹத்தீன் போரில் அவர் சிலுவைக்காரர்களைத் தோற்கடித்து மாபெரும் வெற்றி கண்டு குத்ஸை மீட்டெடுத்தார்.

இதனால் 88 ஆண்டுகளாக இஸ்லாமிய எதிரிகளால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த பைத்துல் முகத்தஸ் முஸ்லிம்களின் வசமானது.

88 ஆண்டுகள் சிலுவைக்காரர்களிடமிருந்த புனித பைத்துல் முகத்தஸை அவர்களிடமிருந்து மீட்டெடுத்து உலக முஸ்லிம்களின் உள்ளங்கவர்ந்த உலக நாயகன் ஆனார் ஸுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி.

அதன் பிறகு உதுமானிய கிலாஃபத் ஆட்சி முழுவதும் அது முஸ்லிம்களின் கைகளிலேயே இருந்தது.

1924ஆம் ஆண்டு கடைசி கலீஃபா அப்துல் ஹமீது அவர்கள் ஆட்சிக் கட்டிலிலிருந்து அகற்றப்படும் வரை அது முஸ்லிம்களின் வசமே இருந்தது. கிலாஃபத் ஆட்சி உடைக்கப்பட்டு, முஸ்லிம்களுக்கு ஒரு தலைமை இல்லாமல் ஆன பிறகே அதனை எதிரிகள் கைப்பற்றினர்.

இன்று யூதர்களின் கைகளில் சிக்கிக் கிடக்கும் பைத்துல் முகத்தஸையும் ஃபலஸ்தீனையும் மீட்டெடுப்பதற்கு ஸலாஹுத்தீன் அய்யூபிகள் தேவைப்படுகிறார்கள். அல் அக்ஸா மஸ்ஜிதை இஸ்ரேலியர்களிடமிருந்து மீட்டெடுப்பது ஃபலஸ்தீன மக்களுக்கு மட்டும் கடமை இல்லை. அது ஒட்டுமொத்த உலக முஸ்லிம்களுடைய கடமை!

உலக முடிவின் போது நிச்சயமாக மஸ்ஜிதுல் அக்ஸாவும், ஃபலஸ்தீன் புனித பூமியும் முஸ்லிம்களின் கைகளுக்கு வந்தே தீரும். இது குறித்தும் நபி صلى الله عليه وسلم  அவர்கள் முன்னறிவிப்புச் செய்துள்ளார்கள்.

பலஸ்தீன பூமியில் வைத்துத்தான் ஈஸா நபியால் தஜ்ஜால் அழிக்கப்படுவான். தஜ்ஜாலுடன் சேர்ந்து சத்தியத்திற்கு எதிராகப் போராடிய யூதர்கள் முஸ்லிம் போராளிகளால் தோற்கடிக்கப்படுவார்கள். இது குறித்து நபி صلى الله عليه وسلم அவர்கள்  இவ்வாறு கூறினார்கள்:

முஸ்லிம்கள் யூதர்களுடன் போர் செய்வார்கள். யூதர்கள் கற்களுக்கும் மரங்களுக்கும் பின்னால் மறைந்திருப்பார்கள். அந்தக் கற்களும் மரங்களும் முஸ்லிமே! அல்லாஹ்வின் அடியானே! இதோ எனக்குப் பின்னால் ஒரு யூதன் இருக்கின்றான். வந்து அவனைக் கொன்று விடு எனக் கூறும் நாள் வரும் வரை உலகம் அழியாது என நபி صلى الله عليه وسلم  அவர்கள் கூறினார்கள்.”

முஸ்லிம் ஹதீஸ் கிரந்தத்தில் இடம் பெற்றுள்ள இந்த நபிமொழியை அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்.

அந்த மகத்தான நாள் வரும் வரை யூதர்களுக்கும் முஸ்லிம்களுக்குமிடையில் மோதலும் முறுகலும் தொடர்ந்து கொண்டே இருக்கும். இதில் முஸ்லிம்கள் சந்திக்கும் இழப்புகள் ஷஹாதத் எனும் வீர மரணமாகவே அமையும்.

அந்த நல்ல நாள் வரும் வரை இந்தப் போராட்டம் தொடர்ந்து கொண்டேயிருக்கும். இதில் சில நேரங்களில் முஸ்லிம்களும் சில நேரங்களில் எதிரிகளும் வெற்றியையும் தோல்வியையும் சந்திக்கலாம்.

ஆனால் இறுதி வெற்றி முஸ்லிம்களுக்குத்தான் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை!

Tuesday 21 March 2023

Why are today's marriages so quickly headed for divorce? What is the solution?

"Iyarkai Aram Nalakkattalai, Ramanathapuram" conducted an Essay Competition. M.S. Seyed Maryam from Kayal Patnam won second prize.

Essay Title:

Why are today's marriages so quickly headed for divorce? What is the solution?



Gone are the days of ignorance. But even if the husband utters a small bad word in anger at some point, women today throw him away.

Even though there was no money or education in those days, good qualities such as patience, kindness, humanity, justice, fairness, virtue, good habit, good conduct, faith and temperance were excellent in people.

But today, even though they are educated, they make a hasty decision in their married life because of the absence of the 'sanctity' that should be known in human life, and come to the wrong conclusion that divorce is the complete solution.

Let's see what is the reason for this and what is the solution for this.

Periods of Married Life

1. Honeymoon Period

This can be said to be the loving period of husband and wife. During this period, the couple will suppress their bad qualities like anger, hatred, power, arrogance, lying etc. and live a wonderful and loving life.

They think that this love will last a lifetime. Because this is what they see in movies and story books, they believe that it is the reality.

But all this love and affection will last for few days or months. During happy times, the human body secretes the hormone endorphin, which makes the brain work better, so despite the wrong words and actions between the couple, the mind takes it positively without considering them as accusations.

During such periods couples share their past experiences, joys and sorrows.

They rejoice in the hope that this state of love will last forever. But this situation will gradually get changes and the next period will start.

2. Struggling Period

This is the period when the couples’ spontaneity begins to emerge. It is not possible to live in hiding natural habits all the time. So, the true face will start to emerge. That's when one will think, “It hasn't been like this for so long... the person has changed... we have chosen the wrong life partner... what should we do now?" The mind begins to lament.

The mind wonders, 'Why are these things happening?' They will stand frozen in shock. It is at this moment that the mind becomes weak and refuses to accept the partner.

This is where the problem arises. It is during this period of struggle that the restless mind becomes stiff and withers. Shaythan also oscillates the mind and causes confusion.

It is at this time that many people opt for divorce. They cannot lead life well.

But those who have temperance and patience will know their differences in nature from each other, know the inner mind, give up and lead life in a good way.

Hasty people take the decision of divorce in haste without analyzing and giving due time.

If you think and act during this period, you can move forward with success in life.

Next comes the period of understanding.

3. Understanding Period

Both sides of the couple can have both qualities! Not everyone is of the same nature. So, there will be various differences of opinion. Since both people are not perfect, if they don't see their flaws and accept them as they are, if they act with understanding, the forthcoming period will become real life and life will start rolling in a good way.

Some aspects to keep in mind for a happy and trouble-free married life:

1. Respect feelings and openly talking: Openness is a major pillar of family love. People who run after money because they don't have time wander without peace of mind. You need to understand what your partner needs and fulfill it and openly talk.

2. Seeing and consulting partner as a friend: If you are friendly with your partner as you are with a friend, then the relationship will be sincere. Love lasts for a while. But friendship stretches as the ocean. So, show friendly affection.

A woman is the one who likes to share his husband in any matter, big or small. We should follow the example of Prophet Muhammad (May Allah bless him and grant him peace) who analyzed not only household matters but also problems in society and gave solutions.

3. Facial Expression: The wife's smile and face cheer up the husband who returns home after going out to work for the happiness and maintenance of the family. It removes his fatigue.

The help and cooperation of the husband will give full satisfaction and happiness to the wife who manages the home and family well.

4. A transparent relationship: There should be no lies in marriage. There is no place for acting in front of the spouse. So, there should be absolute trust, honesty and transparency in the marriage relationship.

5. Resolve problems immediately: Disagreements and moments of dissatisfaction are normal in life. But rather than keeping these things in mind and blowing smoke, we should reveal the contradictions and solve the problems.

6. Dua: Allah's grace should be available to make married life happy and family to be cool. The following prayer taught by the Merciful Allah should be sought frequently:

"Our Lord! Grant us that our spouses and our offspring be a joy to our eyes, and do make us the leaders of the God-fearing." (Surah Al Furqan 25:74)

And always seek the duas taught by the Prophet PBUH.

7. Bringing up children religiously: Women are the lights of the home. They should bring up their children religiously and adeptly. Efforts should be made to make them capable of coping with hardships, losses, sufferings, and normal life inequities.

Kindness, love, respect and dignity should be taught and nurtured to them.

What women should avoid?

1. The wife should not command the husband. It becomes Ego.

2. A wife should not say to her husband, "If you were a good man, you would have done this." Because to the husband, "Am I not a good husband?" A question arises and it becomes a problem.

3. A wife should not say to her husband, "I am in this condition because you are such a husband." It infuriates him and scars him deeply.

Things making wives happy:

1. “I am there for you all the time” is the word enough for a wife from her husband. The wife will finish all the remaining works beautifully.

2. A small word of appreciation and congratulations to her is enough. She thrives on all of them amazingly.

3. She will become an indescribably wonderful companion if you give your time for her and listen her tirelessly.

4. If you give her support and approval, she will become soulful and loving.

The Quran and Hadhees Teachings:

Allah says in the Holy Qur'an:

And of His signs is that He created for you from yourselves mates that you may find tranquility in them; and He placed between you affection and mercy. (Surah Ar Room 30:21)

They are your garment, and you are theirs. (Surah Al Baqarah 2:187)

The Messenger of Allah (May Allah bless him and grant him peace) said:

“Behave well with women. A woman is created from a rib. The most angular aspect of a rib is at its top. If you try to build it, you will break it. If you leave it, it will be crooked. So be kind to women.” (Narrated by: Abu Hurairah (RA), Source: Bukhari)

Once the Prophet sallallahu alayhi wasallam said: “The most beautiful among you is the one who is perfect in faith among the believers. The best among you is the one who behaves best to his wife!” (Narrated by: Abu Huraira (RA), Narrated by: Tirmidhi)

“A woman is married for four things. For her wealth, for her clan distinction, for her beauty, and for her devotion to religion. Marry only religious women. May you be well," said the Prophet.

Umm Salama (may Allah be pleased with her) reported that the Prophet (May Allah bless him and grant him peace) had said: "A woman who dies while her husband is pleased with her will enter her soul." (Tirmidhi)

“A believing man should not (absolutely) despise a believing woman. Abu Huraira (may Allah be pleased with him) reports that the Prophet (May Allah bless him and grant him peace) said, "Even if he hates one quality in her, let him be satisfied with another." (Sahih Muslim: 1469)

“A good woman is the best asset a man can store. She makes her husband happy when he sees her. She obeys him when he commands. She will protect her (property) in the absence of her husband,” said the Prophet (May Allah bless him and grant him peace). (Narrated by: Ibn Abbas (RA), (Abu Dawud 1417)

Conclusion

Both husband and wife should act as two sides of the coin. Marriage is an arrangement made by Allah to get pleasure in worldly life, to avoid mistakes and to create heirs.

If we understand each other and behave in the way shown by Allah and Rasool in our married life and in all activities of life, we will get success, happiness and peace in this life and pave the way to get happiness in the hereafter, Allah's grace and mercy.

Everyone should strive to reach a point where no one can even think of divorce as an emergency solution in life.

If we do a good deed seeking Allah's pleasure alone, then Allah will support it. There is no doubt about it.

“இன்றைய திருமணங்கள் விரைவில் விவாகரத்து நோக்கிச் செல்வது ஏன்? அதற்கான தீர்வு என்ன?

“இயற்கை அறம் நலக்கட்டளை, இராமநாதபுரம்” நடத்திய கட்டுரைப் போட்டியில் இரண்டாவது பரிசு பெற்ற கட்டுரை.
பரிசு பெற்றவர்: M.S. செய்யிது மரியம், காயல் பட்டினம்
கட்டுரையின் தலைப்பு: “இன்றைய திருமணங்கள் விரைவில் விவாகரத்து நோக்கிச் செல்வது ஏன்? அதற்கான தீர்வு என்ன?’‘



“கல்லானாலும் கணவன், புல்லானாலும் புருஷன்” என்ற தத்துவத்தில் வாழ்ந்த அறியாமைக் காலம் கடந்து சென்று விட்டது. ஆனால் கணவன் ஏதோ ஒரு நேரத்தில், கோபத்தில் “மயிரு” என்ற வார்த்தையைச் சொல்லி விட்டால் கூட அவரை மயிராய் கிள்ளி எறிந்து விடுகிறார்கள் இன்றைய பெண்கள்.
அன்று பணம், படிப்பறிவு இல்லாவிட்டாலும் பொறுமை, இரக்கம், மனிதநேயம், நீதி, நியாயம், நல்லொழுக்கம், நற்பண்பு, நன்னடத்தை, நம்பிக்கை, நிதானம் போன்ற நல்ல குணங்கள் மனிதர்களிடம் சிறந்தோம்பியிருந்தன.
ஆனால் இன்றோ படிப்பறிவு இருந்தும் மனித வாழ்வில் தெரிந்திருக்க வேண்டிய ‘புனிதம்’ இல்லாமற்போனதால் எடுத்தோம் கவிழ்த்தோம் என்று திருமண வாழ்விலும் அவசர முடிவு எடுத்து விவாகரத்துதான் இதற்கு முழுமையான தீர்வு என்று தவறான முடிவுக்கு வந்துவிடுகிறார்கள். இதற்கு என்ன காரணம், இதற்கான தீர்வு என்ன என்று பார்ப்போம்.
மண வாழ்வின் காலக்கட்டங்கள்:
1. தேனிலவுக் காலம் (Honeymoon Period)
கணவன்-மனைவியின் அன்பான காலக்கட்டம் என்று இதனைச் சொல்லலாம். இந்தக் காலக்கட்டத்தில் தம்பதியர், கோபம், வெறுப்பு, அதிகாரம், அகங்காரம், பொய் சொல்வது… போன்ற தங்களின் கெட்ட குணங்களை அடக்கிப் பிடித்து
அருமையாக
அன்பான வாழ்க்கை வாழ்வார்கள்.
இந்த அன்பு வாழ்க்கை, வாழ்க்கை முழுவதும் அப்படியே நிலைத்து நிற்கும் என்று நினைத்துக் கொள்வார்கள். சினிமா, கதை நூல்களின் கண்டதும் இப்படித்தான் என்பதால், அதுதான் நிதர்சனம் என்று எண்ணி நம்பிக்கை கொள்வார்கள்.
ஆனால் இந்த அன்பு, பாசம் எல்லாம் கொஞ்ச நாட்கள் அல்லது மாதங்கள்தாம் நிலைத்திருக்கும்.
மகிழ்ச்சியான நேரங்களில் என்டோர்ஃபின் (Endorphine) என்னும் ஹார்மோன் சுரப்பி மனித உடலில் சுரப்பதால், அது மூளையைச் சிறப்பாக இயங்க வைப்பதால் தம்பதியருக்கிடையே தவறான பேச்சுகள், செயல்கள் இருந்தபோதிலும் அவற்றைக் குற்றங்குறைகளாகக் கருதாமல் மனம் அதனை நேர்மறையாக எடுத்துக் கொள்ளும்.
இப்படிப்பட்ட காலக்கட்டங்களில் தம்பதிகள் தங்களுக்குள் நடந்த கடந்த கால அனுபவங்கள், மகிழ்ச்சிகள், துக்கங்கள் போன்றவற்றைப் பரிமாறிக் கொள்வார்கள்.
இந்த அன்பான நிலை நீடித்திருக்கும் என்றே எண்ணி ஆனந்தமாய் மகிழ்வார்கள். ஆனால் இந்த நிலை மாறி அடுத்த காலம் வரும்.
2. போராடும் காலம் (Struggling Period)
இதுதான் மணமக்களின் தன்னியல்புகள் வெளிவரத் தொடங்கும் காலம். எல்லா காலமும் இயல்பை மறைத்து வாழ்வது சாத்தியமில்லை. எனவே உண்மை முகம் வெளிவரத் தொடங்கும். அப்போதுதான், ‘இவ்வளவு நாள் இப்படியில்லையே… ஆள் மாறிப் போய்விட்டாரே… நாம் தவறான வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுத்து விட்டோமோ… இப்பொழுது என்ன செய்வது?” என்று மனம் புலம்ப ஆரம்பிக்கும்.
‘ஏன் இப்படியெல்லாம் நடக்கின்றன?’ என்று மனம் அங்கலாய்க்கும். அதிர்ச்சியில் உறைந்து போய் நிற்கும். இந்தத் தருணத்தில்தான் மனம் தளர்ந்து துணையை ஏற்க மறுக்கும்.
இங்குதான் பிரச்சினை உருவாகிறது. இந்தப் போராட்டக் காலக்கட்டத்தில்தான் நிதானம் இழந்த மனம் இறுகி, வாடி நிற்கும். ஷைத்தானும் மனத்தைக் குழப்பி வில்லங்கத்தை ஏற்படுத்துவான்.
இந்த நேரத்தில்தான் பலரும் விவாகரத்தைத் தேர்வு செய்கிறார்கள். அவர்களால் வாழ்க்கையை நல்ல விதத்தில் ஓட்ட முடிவதில்லை.
ஆனால் நிதானம், பொறுமை உள்ளவர்கள் ஒருவருக்கொருவர் தங்களின் இயல்பு வேறுபாட்டை அறிந்து, உள் மனத்தை அறிந்து, விட்டுக் கொடுத்து வாழ்க்கையை நல்ல முறையில் நடத்துவார்கள்.
அவசர புத்தியுள்ளவர்கள் அலசி ஆராயாமல், உரிய கால அவகாசம் அளிக்காமல் அவசரமாக விவாகரத்து என்ற முடிவை எடுப்பார்கள்.
இந்தக் காலக்கட்டத்தில் சிந்தித்துச் செயல்பட்டால் வாழ்க்கையை வெற்றியோடு முன் கொண்டு செல்லலாம்.
இதற்கு அடுத்து வருவதுதான் புரிதல் காலம்.
3. புரிதல் காலம் (Understanding Period)
தம்பதியர் இரு பிரிவினரும் இரு தரப்பட்ட குணங்களையுடைவர்களாகத்தானே இருக்க முடியும்! எல்லோரும் ஒரே குணமுடையவர்களாக இருப்பதில்லையே… எனவே பல்வேறு கருத்துவேறுபாடுகள் வரத்தான் செய்யும். இரண்டு பேருமே முழுமையடைந்தவர்கள் இல்லை என்பதால் அவர்கள் தங்களின் குறைகளைக் கண்டு கொள்ளாமல் அப்படியே உள்ளது உள்ளபடி ஏற்றுக்கொண்டு விட்டுக் கொடுத்துச் சென்றால், புரிந்துணர்வோடு செயல்பட்டால் இனி வரும் காலம் உண்மையான வாழ்க்கையாக மாறி வாழ்க்கை நல்ல விதமாக உருண்டோட ஆரம்பிக்கும்.
திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக அமைவதற்கும் பிரச்சினைகள் வராமலிருப்பதற்கும் கவனத்திற்கொள்ள வேண்டிய சில அம்சங்கள்:
1. உணர்ச்சிகளை மதிப்பதும் மனம் திறந்து பேசுவதும்: குடும்ப அன்புக்குப் பெரும் தூணாக இருப்பது மனம் திறந்து பேசுவதுதான். நேரமில்லை என்று பணத்தின் பின்னால் ஓடும் மனிதர்கள் மன அமைதி கிடைக்காமல் அலைகின்றனர். துணைக்கு என்ன தேவை என்று புரிந்து கொண்டு அதை நிறைவேற்றுவதும் மனம் திறந்து பேசுதலும் வேண்டும்.
2. துணையை நண்பராகப் பார்ப்பதும் கலந்தாலோசித்தலும்: நண்பனிடம் நட்பாய் உறவாடுவது போல் துணையிடமும் நட்பாகப் பழகினால் அந்த உறவு மனப்பூர்வமானதாக அமையும். அன்பு என்பது சில காலம்தான் நிற்கும். ஆனால் நட்பு என்பது கடல் அளவு நீளும். அதனால் நட்பாய் பாசத்தைக் காட்ட வேண்டும்.
சிறிதோ பெரிதோ எந்த விவகாரமானாலும் அதனைத் தன்னிடம் பங்கு வைக்க வேண்டும் என்று விருப்பப்படுபவள்தான் பெண். வீட்டு விவகாரங்கள் மட்டுமல்ல, சமுதாயத்தில் ஏற்படும் பிரச்சினையானாலும் அலசி ஆராய்ந்து தீர்வுகளைத் தந்த இறைத்தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம் அவர்களை முன்மாதிரியாகக் கொள்ள வேண்டும்.
3. முகபாவனை: குடும்பத்தின் மகிழ்ச்சிக்கும் பராமரிப்புக்குமாக வெளியில் சென்று வேலை செய்து விட்டு வீடு திரும்பும் கணவனை மனைவியின் புன்சிரிப்பும் இன்முகமும் உற்சாகப்படுத்தும். அவனுடைய சோர்வை அகற்றும்.
வீட்டையும் குடும்பத்தையும் நல்வழிப்படுத்தும் மனைவிக்கு கணவனின் உதவியும் ஒத்துழைப்பும் முழு திருப்தியும் மகிழ்ச்சியும் அளிக்கும்.
4. வெளிப்படைத்தன்மை கொண்ட உறவு: மணவாழ்க்கையில் பொய்கள் கூடாது. வாழ்க்கைத் துணைக்கு முன்னால் நடிப்புக்குக் கொஞ்சம் கூட இடம் கிடையாது. அதனால் திருமண உறவில் முழுமையான நம்பிக்கையும் நேர்மையும் வெளிப்படைத்தன்மையும் வேண்டும்.
5. பிரச்சினைகளை உடனே தீர்த்தல்: கருத்துவேறுபாடுகளும் திருப்தியற்ற தருணங்களும் வாழ்க்கையில் சாதாரணமானதுதான். ஆனால் இவற்றை மனத்தில் போட்டு புகை மூட்டுவதை விட முரண்பாடுகளை வெளிப்படுத்தி பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டும்.
6. பிரார்த்தனை: திருமண வாழ்க்கை இன்பமடையவும் குடும்பம் கண் குளிர்ச்சியடையவும் இறைவனின் அருள் கிடைத்தாக வேண்டும். கருணையுள்ள இறைவன் கற்றுத் தந்த கீழ்க்கண்ட பிரார்த்தனையை அதிகமாகக் கேட்க வேண்டும்:
"எங்கள் இறைவனே! எங்கள் மனைவியையும் எங்கள் மக்களையும் எங்களுக்குக் கண் குளிர்ச்சியாக்கி வைத்தருள்வாயாக! அன்றி, பரிசுத்தவான்களுக்கு வழிகாட்டியாகவும் எங்களை நீ ஆக்குவாயாக!" (சூரா அல் ஃபுர்கான் 25:74)
இன்னும் இறைத்தூதர் அவர்கள் கற்றுத் தந்த பிரார்த்தனைகளையும் எப்போதும் கேட்க வேண்டும்.
7. பிள்ளைகளை மார்க்க ரீதியாக வளர்த்தல்: பெண்கள் வீட்டு விளக்காகச் செயல்படுபவர்கள். அவர்கள் தங்கள் மக்களை மார்க்க ரீதியாக, தீனைப் புகட்டி வளர்க்க வேண்டும். தங்கள் வாழ்க்கையில் அனுபவிக்கும் கஷ்டங்கள், நஷ்டங்கள், துன்பங்கள், சாதாரணமாக வாழ்க்கையில் ஏற்படும் ஏற்றத்தாழ்வுகள் போன்றவற்றைச் சமாளிக்கும் திறமை படைத்தவர்களாக அவர்களை உருவாக்க முயற்சி செய்ய வேண்டும்.
கருணை, அன்பு, மதிப்பு, மரியாதை ஆகியவற்றைக் கற்றுக் கொடுத்து வளர்க்க வேண்டும்.
பெண்கள் தவிர்த்துக் கொள்ள வேண்டியவை:
1. மனைவி கணவனுக்குக் கட்டளை பிறப்பித்தல் கூடாது. அது அகங்காரமாக (Egoவாக) மாறும்.
2. மனைவி கணவனிடம், “நீங்கள் ஒரு நல்ல மனிதர் என்றால் இப்படிச் செய்திருப்பீர்கள்” என்று சொல்வது கூடாது. ஏனெனில் கணவனுக்கு, “அப்படியானால் நான் நல்ல கணவன் இல்லையோ?” என்ற கேள்வி உருவாகி, அது பிரச்சினையாக உருவெடுக்கும்.
3. மனைவி கணவனிடம், “நீங்கள் இப்படிப்பட்ட கணவனாக இருப்பதால்தான் நான் இந்த நிலையில் இருக்கிறேன்” என்று சொல்லக் கூடாது. அது அவனது ஆத்திரத்தைக் கிளப்பி, ஆழமாக வடுவாக மாறும்.
மனைவியை மகிழ்ச்சிப்படுத்துபவை:
1. “நான் உனக்கு எல்லா நேரங்களிலும் கூட இருக்கிறேன்” என்ற கணவனின் ஒரு சொல் போதும். மனைவி மீதமுள்ள அனைத்து வேலைகளையும் அழகாக முடித்து விடுவாள்.
2. அவளைப் பாராட்டி வாழ்த்துகின்ற ஒரு சின்ன வார்த்தை போதும். ஆச்சரியப்படுத்தும் விதத்தில் அவள் அனைத்திலும் முன்னேறுவாள்.
3. அவளுடைய பேச்சை நேரம் கொடுத்து, சளைக்காமல் கேட்டால் விவரிக்க முடியாத அளவுக்கு அவள்
அருமையான
துணைவியாக மாறுவாள்.
4. அவளுக்கு ஆதரவும் அங்கீகாரமும் அளித்தால், அவள் ஆன்மாவாகவும் அன்பானவளாகவும் மாறுவாள்.
திருக்குர்ஆனும் திருநபிமொழிகளும்:
அல்லாஹ் அருள்மறை குர்ஆனில் கூறுகிறான்:

இன்னும், நீங்கள் அவர்களிடம் ஆறுதல் பெறுதற்குரிய (உங்கள்) மனைவியரை உங்களிலிருந்தே உங்களுக்காக அவன் படைத்திருப்பதும் உங்களுக்கிடையே உவப்பையும் கிருபையையும் உண்டாக்கியிருப்பதும் அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளதாகும். (சூரா அர் ரூம் 30:21)
அவர்கள் உங்களுக்கு ஆடையாகவும் நீங்கள் அவர்களுக்கு ஆடையாகவும் இருக்கின்றீர்கள். (சூரா அல் பகரா 2:187)
அல்லாஹ்வின் தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம் அவர்கள் கூறினார்கள்: “பெண்களிடம் நீங்கள் நல்லவிதமாக நடந்து கொள்ளுங்கள். ஒரு பெண், விலா எலும்பிலிருந்தே படைக்கப்பட்டுள்ளாள். விலா எலும்பில் மிகவும் கோணலானது அதன் மேற்புறத்தில் உள்ளதுதான். அதை நிமிர்த்த நாடினால் அதை உடைத்திடுவாய். அதை விட்டு விட்டால் கோணலாகவே இருக்கும். எனவே பெண்களிடம் நீங்கள் நல்லவிதமாக நடந்து கொள்ளுங்கள்.” (அறிவிப்பாளர்: அபூ ஹுரைரா (ரலி), நூல்: புஃகாரீ)
ஒருமுறை நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம் அவர்கள் சொன்னார்கள்: “உங்களில் அழகிய குணமிக்கவர்தான் இறைவிசுவாசிகளில் நம்பிக்கையால் முழுமை பெற்றவர். உங்களில் சிறந்தவர், மனைவியிடம் சிறப்பாக நடந்து கொள்பவரே!” (அறிவிப்பாளர்: அபூ ஹுரைரா (ரலி), நூல்: திர்மிதீ)
“நான்கு விடயங்களுக்காகப் பெண் மணமுடிக்கப்படுகிறாள். அவளது செல்வத்திற்காக, அவளது குலச் சிறப்புக்காக, அவளது அழகுக்காக, அவளது மார்க்கப் பற்றுக்காக. நீங்கள் மார்க்கப் பற்றுள்ள பெண்களையே மணந்து கொள்ளுங்கள். உங்களுக்கு நலம் உண்டாகட்டும்” என்று நபிகளார் நவின்றார்கள்.
அண்ணல் நபிகளார் நவின்றதாக உம்மு சலமா (ரலி) அறிவிக்கிறார்கள்: “எப்பெண்மணி தன் கணவன் அவள் மீது திருப்தியாக இருக்கும் நிலையில் மரணமடைகிறாளோ அவள் சுவனம் புகுவாள்.” (திர்மிதீ)

“இறைநம்பிக்கை கொண்ட ஓர் ஆண் இறை நம்பிக்கைகொண்ட ஒரு பெண்ணை (முழுமையாக) வெறுத்து ஒதுக்க வேண்டாம். அவளிடமிருந்து அவர் ஒரு குணத்தை வெறுத்தாலும், மற்றொரு குணத்தைக் கண்டு திருப்தி கொள்ளட்டும்” என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள். (ஸஹீஹு முஸ்லிம் : 1469)
“ஓர் ஆண் சேமித்து வைக்கும் சொத்தில் சிறந்தது நல்ல பெண்ணாகும். கணவன் அவளை காணும்போது அவனுக்கு அவள் மகிழ்ச்சியை ஏற்படுத்துவாள். கட்டளையிடும்போது அவனுக்குக் கட்டுப்படுவாள். கணவன் இல்லாதபோது அவன் (சொத்தைப்) பாதுகாப்பாள்” என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி), (அபூதாவூத் 1417)
முடிவுரை
கணவன், மனைவி இருவரும் நாணயத்தின் இரு புறங்களாகச் செயல்பட வேண்டும். திருமணம் என்பது உலக வாழ்வில் இன்பம் பெறவும் தவறுகள் செய்யாமல் இருக்கவும் வாரிசுகளை உருவாக்கவும் இறைவன் செய்த ஏற்பாடாகும்.
ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து அல்லாஹ்வும் ரசூலும் காட்டித் தந்த வழியில் தாம்பத்திய வாழ்விலும் வாழ்வின் எல்லா செயல்பாடுகளிலும் நடந்து கொண்டால் நம்முடைய இம்மை வாழ்க்கையில் வெற்றியும் மகிழ்ச்சியும் நிம்மதியும் கிடைப்பதோடு மறுமை வாழ்வில் சுவனம் கிடைக்க வழி வகுக்கும். அல்லாஹ்வின் அருளும் கருணையும் கிடைக்கும்.
விவாகரத்து என்னும் அவசரத் தீர்வு இனி வாழ்க்கையில் யாரும் நினைத்துக் கூட பார்க்க இயலாத நிலை வர எல்லோரும் பாடுபட வேண்டும்.
ஒரு நற்செயலை அல்லாஹ்வின் திருப்தியை மட்டும் எதிர்பார்த்து ஒன்றிணைந்து செய்வோமென்றால், அதற்கு அல்லாஹ்வும் துணை நிற்பான். அதில் ஐயம் எதுவும் இல்லை.

Wednesday 23 December 2020

அல்லாஹ்வின் அருள்மொழி!

உலகில் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் கிட்டத்தட்ட 7000 மொழிகள் பேசப்படுகின்றன. மொழி என்பது கலாச்சாரம், வாழ்க்கை ஆகியவற்றின் கண்ணாடி போன்றது. வாழ்க்கையின் ஏற்ற இறக்கங்கள், வெற்றி தோல்விகள் அனைத்தையும் பிரதிபலிக்கின்ற ஊடகம்தான் மொழி.
அல்லாஹ் மனிதனுக்கு அளித்துள்ள ஒரு மகத்தான அருள் இந்த மொழி என்பது. இதனை அல்லாஹ் இப்படிக் கூறுகின்றான்: “அளவற்ற அருளாளன். இக் குர்ஆனை (அவன்தான்) கற்றுக் கொடுத்தான். அவனே மனிதனைப் படைத்தான். அவனே மனிதனுக்கு (பேச்சு) விளக்கத்தையும் கற்றுக் கொடுத்தான்.” (55:1-4)
தான் நினைப்பதைப் பிறருக்கு எத்தி வைக்கும் ஆற்றலை அல்லாஹ் மனிதனுக்கு வழங்கினான். தான் விரும்பியதை, தான் வெறுப்பதை, தனக்கு தேவையுள்ளதை என்று எல்லாவற்றையும் மனிதன் பிறருக்குத் தெரிவிப்பதற்கு அல்லாஹ் பல்வேறு மொழிகளை மனிதனுக்கு நல்கியுள்ளான்.
இந்த மொழியின் மூலம் மனிதர்கள் தங்களுக்குள் பரஸ்பரம் அடையாளப்படுத்திக்கொள்கிறார்கள். பந்தங்களை நிலைநிறுத்திக்கொள்கிறார்கள். ஒருவன் எந்த நாட்டைச் சார்ந்தவன், நாட்டில் எந்தப் பகுதியைச் சார்ந்தவன் என்lபதை அவன் பேசும் மொழியை வைத்து, அந்த மொழியை அவன் உச்சரிக்கும் விதத்தை வைத்து கண்டுபிடித்துவிடலாம்.
உலகிலுள்ள மொழிகளில் சிலவற்றுக்கு மொழிச் செறிவும் இலக்கியச் செறிவும் அதிகம் உண்டு. மிகத் தொன்மையான தமிழ் அதில் ஒன்று. அதேபோன்று அனைத்து சிறப்புகளும் அமைந்துள்ள மொழிதான் அரபி.
நமது தமிழைப் போலவே அரபியும் ஒரு செம்மொழி. அதன் சொல்வளம் வியக்கத்தக்கது.
ஆண்டு என்பதற்கு 24 சொற்களையும்
ஒளி என்பதற்கு 21 சொற்களையும்
இருள் என்பதற்கு 52 சொற்களையும்
கதிரவன் என்பதற்கு 29 சொற்களையும்
நீர் என்பதற்கு 170 சொற்களையும்
ஒட்டகம், வாள் போன்ற வார்த்தைகளைக் குறிக்க 1000 சொற்களையும்
கொண்டுள்ளது அரபி.
“நாகரிக உலகின் மத்திய காலக்கட்டத்தில் பல நூற்றாண்டுகள் அரபி ஒரு கற்பிக்கும் மொழியாக, கலாச்சார மொழியாக, முற்போக்குக் கருத்துகளை முன்னிறுத்திய மொழியாக விளங்கியது. 9ம் நூற்றாண்டு முதல் 12ம் நூற்றாண்டு வரை தத்துவம், மருத்துவம், வானியல், புவியியல் பற்றிய அநேகப் படைப்புகள் அரபியில் படைக்கப்பட்டது போல் வேறு எந்த மொழியிலும் படைக்கப்படவில்லை” என்கிறார் கீழ்த்திசை மொழியியல் வல்லுநர் பிலிஃப் கே. ஹிட்டி.
ஒரு முஸ்லிமைப் பொறுத்தவரை அரபி மொழியோடு அவனுக்கு ஆழமான தொடர்பு இருக்கவேண்டும். ஏனெனில் இது அவனது நம்பிக்கை சம்பந்தப்பட்டது. ஈருலகிலும் வெற்றி பெறுவதற்கு, வாழ்வின் அனைத்துத் திசைகளுக்கும் வழிகாட்டியாக அவன் தேர்ந்தெடுத்துள்ள மார்க்கமான தீனுல் இஸ்லாமை அல்லாஹ் மனிதனுக்குக் கற்றுக் கொடுப்பது அரபி மொழியில்தான்.
(அல்லாஹ்விடம்) அவர்கள் பயபக்தியுடன் இருப்பதற்காக, எத்தகைய (குறையும்) கோணலும் இல்லாத இந்தக் குர்ஆனை அரபி மொழியில் (இறக்கி வைத்தோம்). (39:28)
இன்று 26 நாடுகளில் ஆட்சி மொழியாக அரபி இருக்கிறது. சுமார் 30 கோடி மக்கள் அரபி மொழியைப் பேசுகின்றனர். ஐ.நா.வின் அதிகாரப்பூர்வ மொழிகளுள் அரபியும் ஒன்று. சின்னஞ் சிறிய வார்த்தைகளில் பென்னம் பெரும் கருத்துகளைச் சொல்லும் தனிச் சிறப்பு மிக்க மொழியாக அரபு மொழி விளங்குகிறது.
(குர்ஆனாகிய) இவ்வேதம் (முந்தைய வேதங்களை) மெய்யாக்குகிற அரபி மொழியிலுள்ளதாகும். இது அநியாயம் செய்வோரை அச்சமூட்டி எச்சரிப்பதற்காகவும் நன்மை செய்பவர்களுக்கு நன்மாராயமாகவும் இருக்கிறது. (46:12)
இந்த அற்புத மொழியைக் கற்பது நமது கடமை என்றும்
அதனைக் கற்றால்தான் நம்முடைய தீனை
முழுமையாகக் கற்க முடியும் என்றும்
அதனை நமது வாழ்வில் நடைமுறைப்படுத்த முடியும் என்றும் ஒரு முஸ்லிம் எண்ணவேண்டும். அதற்கான முயற்சிகளில் இறங்கவேண்டும். அரபி மொழியை முழுமையாகக் கற்கவேண்டும்.
டிசம்பர் 18 - சர்வதேச அரபிமொழி தினம்!

 

Tuesday 21 April 2020

கரீம் ஹாஜியும் கொரோனாவும்

கரீம் ஹாஜி தன் தள்ளுவண்டியோடு கிளம்பினார். சந்தைக்குச் சென்று அப்துல்லாஹ் மச்சானிடம் காய்கறிகளை வாங்கவேண்டும். அவன் தூரத்துச் சொந்தம். சின்ன வயதிலிருந்தே மச்சான் என்று அழைத்து வழக்கமாகி விட்டது.

‘இன்னைக்கு எப்படி இருக்கானோ… நல்ல மூடுல இருந்தா கொஞ்சம் சகாய விலைக்குத் தருவான். கையில நாலு காசு கூட நிக்கும்’ என்று எண்ணியவாறே தள்ளுவண்டியைத் தள்ள ஆரம்பித்தார் கரீம் ஹாஜி.

ஹஜ் செய்திடவேண்டும் என்ற ஆவலில் வாயைக் கட்டி வயிற்றைக் கட்டி பணத்தைச் சேர்த்தார் கரீம் ஹாஜி. மனைவியின் கொஞ்சம் நகைகளை விற்றும் தனக்கென்று இருந்த ஒரு சிறிய காணி நிலத்தை விற்றும் தேறிய பணத்தை வைத்து எப்படியோ கரீமும் அவருடைய மனைவி ஆயிஷாவும் 20 வருடங்களுக்கு முன்பு ஹஜ் கமிட்டியில் எழுதிப்போட்டு, குலுக்கலில் தேர்வாகி ஹஜ் செய்துவிட்டனர். அதனால் வெறும் கரீமாக இருந்தவர், கரீம் ஹாஜியானார். மற்றபடி ஹாஜியார் என்றவுடன் பணக்காரர் என்று எண்ணிவிடவேண்டாம். அன்றாடங்காய்ச்சிதான்.

“வாங்க மச்சான்… நீங்க ஊருக்குத்தான் ஹாஜி… எனக்கு மச்சான்தான்… என்ன இன்னைக்கு கொஞ்சம் லேட்டா வாரிய…?” என்று சிரித்துக்கொண்டே அப்துல்லாஹ் மச்சான் கேட்டான். அவனும் இவரை மச்சான் என்றுதான் அழைப்பான்.

‘ஆஹா… பயபுள்ள நல்ல மூடுலதான் இருக்கான்’ என்று மனதில் கணக்குப் போட்டவாறே தள்ளுவண்டியை நிறுத்திவிட்டு அப்துல்லாஹ்விடம் வந்தார் கரீம் ஹாஜி.

அவனுக்கும் பெரிய கடை ஒன்றும் இல்லை. அந்தச் சந்தையில் ஓர் ஓரத்தில் கிடுகு போட்ட சின்னக் கடைதான். காய்கறி மொத்த வியாபாரம். இவனிடமிருந்து தினமும் காலையில் காய்கறிகளை மொத்த விலைக்கு வாங்கித்தான் கரீம் ஹாஜி தன் பிழைப்பை ஓட்டி வந்தார்.

“பூலாஞ்செண்டு சரியா பழுக்கலையோ… பச்சையா இருக்கு…”

“இன்னைக்கு இதுதான் வந்திச்சு…”

“மச்சான்... ஏதோ கொரோனாவாம். கவனமா இருந்துக்கோங்க. ஆயிஷா மச்சி கிட்டயும் சொல்லி வைங்க...” என்றான் அப்துல்லாஹ்.

“ஆமாமா... சைனாவிலிருந்து வந்திருக்காம். எங்கெல்லாமோ பரவிக்கிட்டு வருதாம்...” என்று தான் கேள்விப்பட்டதையும் சொன்னார் கரீம் ஹாஜி.

காய்கறிகளை தன் தள்ளுவண்டியில் முடிந்தவரை ரகம் வாரியாகப் பிரித்து வைத்தார். சிகரெட் அட்டையில் தேதி போட்டு அப்துல்லாஹ் மச்சான் அன்றைய கணக்கை எழுதித் தந்தான். விலையைக் கொஞ்சம் குறைத்துத்தான் போட்டிருந்தான்.

அதைச் சட்டைப்பையில் வைத்தவாறே தள்ளுவண்டியைத் தள்ள ஆரம்பித்தார். நான்கைந்து தெருக்கள் தள்ளி உள்பக்கமாகச் சென்று கூவ வேண்டும்.

பலருடைய வீடுகளிலும் கரீம் ஹாஜி அன்று கொண்டு வருகிற காய்கறிகளைப் பொறுத்துதான் மதிய உணவே அமையும். இதற்காக ‘கரீம் ஹாஜி இன்னைக்கு நல்ல காய்கறியா கொண்டு வரணும்பா…’ என்று பிரார்த்திக்கிற கணவர்களும் உண்டு.

உச்சி வெயில் மண்டையைப் பிளந்தது. நான்காம் தெருவிலுள்ள பள்ளியில் ளுஹர் தொழுத கரீம் ஹாஜி, அசதியில் வெளிப்பள்ளியில் அயர்ந்து உறங்கினார். முழிப்பு வந்தவுடன் பசி வயிற்றைக் கிள்ளியது. எழுந்து முகம், கை கழுகிவிட்டு பள்ளி காம்பவுண்டுக்குள் நிறுத்தியிருந்த தள்ளுவண்டிக்கு வந்தார். தூக்குச் சட்டியில் வைத்திருந்த பழஞ்சோறை ஓரமாக அமர்ந்து சாப்பிட ஆரம்பித்தார்.

சோறும் சாம்பாரும் செய்து தருகிறேன் என்று மனைவி சொல்வாள். ஆனால் வெயிலில் அலைவதால் கெட்டுப்போய் விடும் என்பதால் பழஞ்சோறைத்தான் தரச் சொல்வார். ஊறுகாயைத் தொட்டு உண்டால் அன்றைய மதிய உணவும் முடிந்துவிடும். வயிறும் மனமும் நிரம்பி விடும்.

வெயில் தாழும் வரை பள்ளியிலேயே இருந்தார் கரீம் ஹாஜி. அஸ்ர் தொழுதுவிட்டு தள்ளுவண்டியைத் தள்ள ஆரம்பித்தார். வாழைப்பழங்கள் கொஞ்சம் மீதமிருந்தன. இன்னும் இரண்டு தெருக்களுக்குச் சென்று கூவி விற்க வேண்டும்.

அன்றைக்கு தள்ளுவண்டி காலியாகி விட்டது கரீம் ஹாஜிக்கு திருப்தியை ஏற்படுத்தியது. நேராகச் சந்தைக்குச் சென்றார். அப்துல்லாஹ் மச்சானிடம் சென்று அன்றைய கணக்கை முடித்தார்.

எல்லாம் போக 300 ரூபாய் கையில் தேறியது. அடுத்த நாளுக்கு வேண்டிய மளிகைச் சாமான்களைச் சந்தையில் வாங்கிவிட்டு வீட்டை நோக்கி கரீம் ஹாஜி வண்டியைத் தள்ளினார்.

மறுநாள் சந்தைக்கு வந்தவருக்கு பெரும் ஏமாற்றம் காத்திருந்தது. ஊரடங்கு உத்தரவாம்… அதனால் கடைகளையெல்லாம் அடைக்க வேண்டுமாம்…யாரும் சந்தைக்கோ கடைத்தெருவுக்கோ வரக்கூடாதாம்… என்று மக்கள் பேசிக்கொண்டனர்.

அப்துல்லாஹ் மச்சான் கடை பூட்டிக் கிடந்தது. வீட்டிலுள்ள செலவுகள் மனதில் வந்துபோயின. என்ன செய்வதென்று தெரியவில்லை கரீம் ஹாஜிக்கு.

மீண்டும் வீட்டை நோக்கி வண்டியைத் தள்ளினார். செலவுக்கு என்ன செய்வது… சிந்தனை தடுமாறியது.

வீட்டிலிருந்த ஒருசில மளிகை சாமான்களை வைத்து, மிச்ச சொச்ச காய்கறிகளை வைத்து மூன்று நாட்களை ஓட்டினார்கள் கரீம் ஹாஜியும் ஆயிஷாவும்.

----------------------------------------

கரீம் ஹாஜி தலையில் கை வைத்தவாறு வீட்டில் அமர்ந்திருந்தார். கொரோனா காரணமாக ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்டு ஐந்து நாட்களாயிற்று. வீட்டிலிருந்த மளிகைச் சாமான்கள், அரிசி, பருப்பு அனைத்தையும் வழித்தாயிற்று. இனி சாப்பாட்டுக்கு என்ன செய்வது?

பானையில் இருந்த சிறிது தண்ணீரை வைத்து தேத்தண்ணி போட்டுத் தந்தாள் ஆயிஷா. அதைச் சூடாகக் குடித்துக்கொண்டே சிந்தனையில் ஆழ்ந்தார் கரீம் ஹாஜி.

கரீம் – ஆயிஷா தம்பதியருக்குக் குழந்தைகள் இல்லை. தள்ளு வண்டியில் காய்கறிகளை வைத்துக்கொண்டு தெருத் தெருவாக விற்று தினமும் கிடைக்கும் நூறோ இருநூறோ ரூபாயை வைத்துத்தான் அவர்களின் பிழைப்பு ஓடிக்கொண்டிருந்தது.

உழைத்த கைகள்… யாரிடமும் கையேந்திப் பழக்கமும் இல்லை. உதவுவதற்கு அக்கம் பக்கத்தில் வீடுகளும் இல்லை. ஒன்றும் புரியவில்லை கரீம் பாய்க்கு. ஆயிஷா அப்படியே ஒரு மூலையில் அசைவற்று அமர்ந்திருந்தாள்.

திடீரென்று வாசற்கதவு தடதடவென்று தட்டப்படும் சப்தம் கேட்டது. கதவைத் திறந்த கரீம் ஹாஜி அதிர்ச்சியில் அசைவற்று நின்றார். “நீங்கதானே கரீம்… வாங்க பாய்… இன்ஸ்பெக்டர் கூப்பிடுறார்…” என்று முகக்கவசமும் கையுறையும் அணிந்திருந்த நான்கைந்து போலீஸ்காரர்கள் வாசலில் நின்று கூறினர்.

ஆயிஷாவும் சப்தம் கேட்டு இயன்றும் இயலாமலும் எழுந்து வாசலை நோக்கி ஓடி வந்தாள். கரீம் ஹாஜி என்ன கேட்பது, என்ன செய்வது என்று தெரியாமல் தடுமாறிக்கொண்டிருக்கும்பொழுதே தயாராக நின்றிருந்த ஆம்புலன்சுக்கு அவரை அழைத்து வந்தனர். ஆம்புலன்ஸ் பணியாளர்கள் அவரை உள்ளே ஏற்றினர். ஆயிஷா அச்சத்தில் அலறுவது ஈனஸ்வரமாக கரீம் ஹாஜியின் காதுகளில் விழுந்தது.

“ஏன் என்னைய புடிச்சுட்டுப் போறீங்க…” என்று கரீம் பாய் பதட்டத்துடன் கேட்டது யார் காதிலும் விழவில்லை. முன் இருக்கையிலிருந்த ஒரு காவலர், “டெல்லி தப்லீக் ஜமாத்துக்குப் போய் வந்தீங்களா பாய்… அங்க போய்ட்டு வந்தவங்க எல்லாத்துக்கும் கொரோனா வந்திருக்காம்… எல்லாத்தையும் புடிச்சு டெஸ்ட் எடுக்க அரசாங்க உத்தரவு வந்திருக்கு…” என்றார்.

“நான் எந்த மாநாட்டுக்கும் போகலீங்க… எனக்கு எதுவும் இல்லீங்க சார்…”

“உங்க பேர் லிஸ்ட்ல இருக்கே...”

கரீம் ஹாஜியின் தாடியையும் ஜிப்பாவையும் வைத்து யாரோ இவரது பெயரையும் லிஸ்டில் ஏற்றிக் கொடுத்துள்ளனர்.

மற்ற காவலர்கள் போலீஸ் ஜீப்பில் ஆம்புலன்சைப் பின்தொடர்ந்து வந்தனர். அதற்குள் அரசு மருத்துவமனை வந்துவிட்டது. மருத்துவமனை வளாகத்திற்குள் தற்காலிகமாக அமைக்கப்பட்டிருந்த காவல் நிலையத்துக்குள் அவரை அழைத்துச் சென்றார்கள். ஏட்டையா வந்து பெயர், வயது, வீட்டு முகவரி என்று எல்லாவற்றையும் சரி பார்த்துக் கொண்டார்.

கரீம் ஹாஜியின் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்துகொண்டே இருந்தது. பசி வயிற்றைக் கிள்ளியவுடன்தான் காலையிலிருந்து ஒன்றும் சாப்பிடாதது நினைவுக்கு வந்தது. ஆயிஷா என்ன செய்கிறாளோ என்று மனத்துக்குள் ஆதங்கப்பட்டார்.

மதிலில் சாய்ந்திருந்தவர் அப்படியே விட்டத்தைப் பார்த்துக்கொண்டு சிலையாகக் கிடந்தார். “பாய்… இந்தாங்க டீ சாப்பிடுங்க…” என்று டீயையும் பிஸ்கட்டையும் தரையில் வைத்தார் ஒரு காவலர்.

தேநீரைப் பார்த்ததும் ஏதோ உந்துதல் வந்தவராய் ஒரு கையால் டீயை எடுக்க முனைந்தார். கை நடுங்கியதால் இரண்டு கைகளையும் கொண்டு டீ கிளாசை இறுகப் பற்றிக்கொண்டு எடுத்து ஒரே வீச்சில் குடித்தார். பசியின் கொடுமையில் தேநீரின் சூடு அவருக்கு ஒன்றுமே தெரியவில்லை.

தேநீர் உள்ளே சென்றவுடன் நரம்புகளுக்குள் புதிய மின்சாரம் பாய்ந்தது போலிருந்தது. உடலுக்குள் புதுத் தெம்பு புகுந்தது. பசியால் அடைத்திருந்த காதுகள் திறந்தன. மங்கலாக இருந்த கண்கள் தெளிந்தன. பிஸ்கட்டையும் சாப்பிட்டு முடித்தார்.

‘ஆயிஷா பசிக்கு என்ன செய்கிறாளோ… ஏற்கனவே பலவீனமான உடம்பு அவளுக்கு…’ என்று மனதுக்குள் நினைத்தவுடன் நிறைந்தன கண்கள்.

சிறிது நேரத்தில் போலீஸ் ஸ்டேஷனில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. மிடுக்காக முகக்கவசமும் கையுறையும் அணிந்திருந்த ஒருவர் உள்ளே வந்தார். ஏட்டையாவும் மற்ற போலீஸ்காரர்களும் எழுந்து சல்யூட் அடித்தார்கள்.

“என்னய்யா… இன்னைக்கு எத்தனை பேரு…?” என்று கேட்டுக்கொண்டே தன் இருக்கையில் அமர்ந்தார் அவர்.

“இன்ஸ்பெக்டர் அய்யா… இன்னைக்கு மொத்தம் 11 பேர்… அமெரிக்காவிலிருந்து வந்த 10 பேர்… அவங்கள அல்ரெடி ஆஸ்பத்திரிக்கு அனுப்பிச்சுட்டோம். ஒருத்தர் தப்லீக் ஜமாத் கேஸ்… இங்க உள்ள இருக்கார்…” என்ற ஏட்டையா நோட்டை இன்ஸ்பெக்டரிடம் நீட்டினார்.

“ஓகே… இவரையும் ஐசோலேஷன் வார்டுக்குக் கூட்டிட்டுப் போகச் சொல்லுங்க…” என்று அந்த நோட்டில் கையெழுத்திட்டார் இன்ஸ்பெக்டர்.

ஏட்டையா காவலர்களிடம் சொல்ல, முகக்கவசம் அணிந்த காவலர்கள் அவரை இரு பக்கமும் பிடித்துக்கொண்டு சென்றனர். வெளியே வந்த கரீம் ஹாஜி அரண்டு விட்டார். நூற்றுக்கணக்கான கேமராக்கள் இவரைப் பார்த்ததும் பரபரப்பாயின. கேமராக்களின் ஃபிளாஷ் வெளிச்சங்களினால் கரீம் ஹாஜியின் கண்கள் கூசின. கரீம் ஹாஜியின் இரு பக்கமும் வந்த காவலர்கள் பெருமிதத்துடன் போட்டோவுக்கு போஸ் கொடுத்து புன்னகைத்தனர்.

ஐசோலேஷன் வார்டு ஆண்கள் பிரிவில் நின்றுகொண்டிருந்த அமெரிக்காவிலிருந்து வந்த 10 பேரோடு கரீம் ஹாஜியையும் நிறுத்தினர். ஒருவர் வந்து கரீம் ஹாஜியின் முகத்தில் கவசத்தை மாட்டிவிட்டுச் சென்றார்.

மணிக்கணக்காகக் காத்திருந்த பின்னர் மதிய வேளையில் அவர்களை உள்ளே அழைத்துச் சென்று, ஒவ்வொரு ஆளாக தனியறைக்கு அழைத்துச் சென்றனர்.

கரீம் ஹாஜியையும் அதேபோன்று தனியறைக்கு அழைத்துச் சென்று தொண்டையிலிருந்து ஒரு துளி சளியும் விரலைக் குத்தி சிறிது இரத்தமும் எடுத்தனர். பின்னர் அவர்களனைவரையும் ஐசோலேஷன் வார்டிலுள்ள படுக்கைகளுக்கு அனுப்பினார்கள். ஒவ்வொரு படுக்கையும் இரண்டு மீட்டர் இடைவெளியில் போடப்பட்டிருந்தது.

படுக்கையில் சாய்ந்த கரீம் ஹாஜி, எதிரே இருந்த டிவியை அப்பொழுதுதான் கவனித்தார். “டெல்லி தப்லீக் மாநாட்டிற்குச் சென்று வந்த கரீம் என்பவருக்கு கொரானா தொற்று ஏற்பட்டுள்ளது. பலமுறை அறிவித்தும் வெளிவராமல் வீட்டிலேயே ஒளிந்திருந்த அவரைப் போலீசார் மடக்கிப் பிடித்து அரசு மருத்துவமனையில் தனிமைப் பிரிவில் சேர்த்துள்ளனர்” என்று செய்தி வாசிக்கப்பட்டுக் கொண்டிருக்க, இரு பக்கமும் போலீஸ் சகிதம் கரீம் பாய் அழைத்துச் செல்லப்படும் காட்சி காண்பிக்கப்பட்டது.

“டெல்லி தப்லீக் மாநாட்டுக்குச் சென்று வந்த ஒருவர் பிடிபட்டார். அரசு மருத்துவமனையில் அனுமதி” என்று அதே செய்தி கீழே ஓடிக்கொண்டிருந்தது.

கரீம் ஹாஜிக்குத் தூக்கி வாரிப்போட்டது. டெல்லியே சென்றிராத தன்னை “சந்தேகத்தின் அடிப்படையில் பிடிக்கப்பட்டுள்ளார்” என்றுகூடச் சொல்லாமல் உறுதியாக, தெளிவாகச் சொல்கிறார்களே… என்று உள்ளூர குமைந்து, குலுங்கிக் குலுங்கி அழுதார். எல்லாம் வெறுமையாகத் தெரிந்தன. கண்களை மூடினார்.

“பாய்… இந்தாங்க... இந்த ஜூஸ குடிங்க…” என்று ஒரு நர்ஸ் வந்து எழுப்பியவுடன்தான் அசதியில் தான் அயர்ந்து தூங்கிவிட்டது தெரிந்தது. எழுந்து ஜூஸை வாங்கியவருக்கு ஆயிஷாவின் நினைவு சட்டென்று வந்து ஈரக்கொலையைப் பிழிந்தது. ஜூஸைக் குடித்து முடித்தார்.

---------------------------------

ஆயிஷாவின் கைகள் நடுங்கின. நெஞ்சு படபடத்தது. பசியில் காதுகள் அடைத்தன. மதிலைப் பிடித்து மெல்ல எழுந்தவள் தண்ணீர்ப் பானையை நோக்கி நடந்தாள்.

பானையில் தண்ணீர் அடியில் கிடந்தது. அதனை மொண்டு குடித்தவள், அப்படியே அந்த இடத்தில் சுருண்டு படுத்துவிட்டாள். கண்கள் மங்கின. மூச்சு நின்றுவிடும் போலிருந்தது.

---------------------------------

“பாய்… நீங்க ஒரே நாள்ல ரொம்ப ஃபேமஸ் ஆயிட்டீங்க…” என்று பக்கத்து படுக்கையிலிருந்த அமெரிக்காவிலிருந்து வந்தவர் சொன்னார். ‘என்ன?’ என்று கரீம் ஹாஜி கேட்பதற்குள் அவர் அன்றைய மாலை நாளிதழை நீட்டினார்.

கரீம் ஹாஜியின் மூச்சே நின்றுவிடும் போலிருந்தது. “தலைமறைவாக இருந்த தப்லீகி கைது! டெல்லி மாநாட்டுக்கு சென்று வந்தவர்!!” என்று முதல் பக்கத்தில் கொட்டை எழுத்துகளில் தலைப்புச் செய்தி வந்திருந்தது. கரீம் ஹாஜியும் அவரது இரு பக்கங்களிலும் பெருமிதத்துடன் நிற்கும் போலீஸ்காரர்களின் படமும் பெரிய அளவில் வந்திருந்தது.

கண்கள் நிலைகுத்தி நிற்க, கைகள் நடுநடுங்க, நெஞ்சம் படபடக்க அந்தச் செய்தி முழுவதையும் வாசித்து முடித்தார். முற்றிலுமாக புதிய கதை சொல்லப்பட்டிருந்தது. வேறு யாருடைய செய்தியையோ படிப்பது போலிருந்தது. ஆனால் இடையில் கரீம் என்று பெயர் வருவதை வைத்துத்தான் இது தம்மைக் குறித்த செய்தி என்றுணர்ந்தார்.

நெஞ்சு படபடப்பு குறையவில்லை. அப்படியே கண்கள் மூடிக் கிடந்தார் கரீம் ஹாஜி. தொலைக்காட்சியில் மீண்டும் மீண்டும் கரீம் ஹாஜியின் முகம் வந்துகொண்டேயிருந்தது. கீழே அவரது பெயரில் செய்தி ஓடிக்கொண்டே இருந்தது.

இரண்டு நாட்கள் கழிந்தன.

-------------------------------

“கொரோனா ரிசல்ட் வந்திருக்கு...” என்று மூன்றாவது நாள் காலையில் பரிசோதனை முடிவுகளுடன் வார்டுக்கு வந்த மூத்த நர்ஸ் அறிவிக்கவும் அனைவரும் அலறிப் புடைத்து படுக்கைகளிலிருந்து எழுந்தனர்.

“கரீம் என்பவருக்கு நெகட்டிவ். மீதி 10 பேருக்கும் பாசிட்டிவ்…”

அந்த 10 பேரும் அச்சத்தில் அரற்றினார்கள்.

கரீம் ஹாஜியிடம் வந்த மூத்த நர்ஸ், “உங்களுக்கு கோரோனா இல்லன்னு வந்துட்டுது. நீங்க வீட்டுக்குப் போகலாம்” என்று கூறினார்.

கரீம் ஹாஜி மலங்க மலங்க விழித்தார். அப்ப டிவியிலயும் பேப்பர்லயும் வந்த செய்தி… அவருக்கு ஒன்றுமே புரியவில்லை.

ஐசோலேஷன் வார்டு ஆண்கள் பிரிவிலிருந்து மெல்ல வெளியே வந்த கரீம் ஹாஜி, வீதியிலிறங்கி மூன்று மைல் தொலைவிலிருக்கும் தன் வீடு நோக்கி மெதுவாக நடந்தார்.

“இந்தாங்க பாய்… இதுல பிரியாணி இருக்கு… சாப்பிடுங்க…” என்று ஒரு குரல் கேட்டுத் திரும்பினார். அங்கே இலேசாகத் தாடி வைத்திருந்த ஒரு முஸ்லிம் இளைஞன் கையில் ஒரு பொட்டலத்தையும் தண்ணீர் பாட்டிலையும் கரீம் ஹாஜியின் கைகளில் திணித்துவிட்டு ஓடினான்.

கரீம் ஹாஜி அவன் ஓடிய திசையில் நோக்கினார். அங்கே முகக்கவசம் அணிந்து, கையுறை அணிந்த முஸ்லிம் இளைஞர்கள் வீதியில் வருபவர்களுக்கு உணவுப் பொட்டலங்களைக் கொடுப்பதில் மும்முரமாக இயங்கிக்கொண்டிருந்தனர்.

இன்னும் இரண்டு மைல் தொலைவிலிருக்கும் வீட்டுக்குப் போகவேண்டுமெனில் இதனைச் சாப்பிட்டால்தான் தெம்பு வரும் என்றெண்ணிய கரீம் ஹாஜி, அருகிலிருந்த மரத்தடியில் அமர்ந்து பிரியாணிப் பொட்டலத்தைப் பிரித்தார்.

அவர் சாப்பிட்டுக்கொண்டிருக்கும்பொழுது, “பாய்… இதுல ஒரு மாசத்துக்கு தேவையான அரிசி, பருப்பு, மளிகை சாமான்கள் இருக்கு… எடுத்துட்டுப் போங்க பாய்…” என்று ஒரு இளைஞன் ஒரு பொட்டலத்தை கரீம் ஹாஜியின் அருகில் வைத்துவிட்டு ஓடினான்.

அந்தப் பொட்டலத்தையும் ஓடிப் போன அந்த இளைஞனையும் பார்த்த கரீம் ஹாஜியின் கண்கள் நனைந்தன. மரத்தடியில் கைகழுவிவிட்டு எழுந்த கரீம் ஹாஜி, அந்தப் பொட்டலத்தையும் எடுத்துக்கொண்டு வீடு நோக்கி நடந்தார். ஆயிஷா என்ன செய்கிறாளோ… என்று மனம் இடைக்கிடையில் கேட்டுக்கொண்டது.

-----------------------------------

“ஆயிஷா… ஆயிஷா…” என்று கூறிக்கொண்டே தன் வீட்டுக் கதவைத் தட்டினார் கரீம் ஹாஜி. கதவு தானாகத் திறந்தது.

உள்ளே புகுந்த கரீம் ஹாஜி முன்னறையில் நோக்கினார். உள்ளறைக்கு ஓடினார். அடுக்களைக்கு ஓடினார். கொல்லைப்புறத்தில் தேடினார். எங்குமே ஆயிஷாவைக் காணவில்லை.

தண்ணீர்ப் பானைக்கு அருகில் வந்தார். அது உடைந்து கிடந்தது. கரீம் ஹாஜியின் தலையில் இடி விழுந்தது போலிருந்து. கண்ணீர் தாரைதாரையாகக் கொட்ட ஆரம்பித்தது.

அரக்கப் பரக்க வெளியே ஓடி வந்தவர் தெருவில், ”குமாரண்ணே... ஆயிஷாவப் பார்த்தீங்களா...?” என்று கேட்டார். ஏதோ பேய், பிசாசைப் பார்ப்பது போல் குமார் கரீம் ஹாஜியை விட்டு விலகி ஓடினார். தெருவில் வருவோர் போவோரிடம் அங்கும் இங்குமாக ஓடி ஆயிஷாவைப் பற்றி விசாரித்தார் கரீம் ஹாஜி. அனைவரும் அவரைப் பார்த்ததும் அலறிப் புடைத்து அகன்று சென்றனர்.

கரீம் ஹாஜிக்கு ஒன்றும் புரியவில்லை. ‘நாம் என்ன தவறு செய்தோம்...? ஏன் இப்படி ஓடி ஒளிகிறார்கள்?’

அப்படியே தலையில் கை வைத்து வீட்டு வாசற்படியில் அமர்ந்தார் கரீம் ஹாஜி. வருவோர் போவோரை வெறுமையாகப் பார்த்துக்கொண்டிருந்தார்.

“பாய்… உங்க பொண்டாட்டிய ஆஸ்பத்திரிக்குக் கூட்டிட்டு போய்ட்டாங்க…” என்று குரல் கேட்டு தலையைத் திருப்பினார் கரீம் ஹாஜி. கொஞ்சம் தள்ளியிருக்கும் வீட்டில் வாழும் சலீம் தூரத்தில் நின்று கத்தினார்.

“ஏன் அவள ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டுப் போனாங்க?”

“உங்களுக்குக் கொரோனா இருக்கிறதால அவங்களுக்கும் தொற்றியிருக்கும்னு சொல்லி ஆம்புலன்சுல கூட்டிட்டுப் போனாங்க…”

வாரிச் சுருட்டிக்கொண்டு தான் வந்த மருத்துவமனை நோக்கி ஓடினார் கரீம் ஹாஜி. மருத்துவமனை வளாகத்திற்குள் நுழைந்தவர் ஐசோலேஷன் வார்டு பெண்கள் பிரிவு நோக்கி ஓடினார்.

ஆண்கள் பிரிவில் கரீம் பாய் சேர்க்கப்பட்ட அடுத்த நாள் பெண்கள் பிரிவில் ஆயிஷா சேர்க்கப்படிருக்கிறாள். வெளியே கவலையுடன் நின்றிருந்தவர்களுடன் கரீம் பாயும் சேர்ந்து தன் மனைவியின் வருகையை எதிர்பார்த்து வார்டின் வாசலையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்தார்.

MSAH