Wednesday 9 October 2013

கண் கண்ட கவ்லா!


இஸ்லாத்​தை ஆரம்பகாலத்தில் ஏற்றுக்​கொண்ட ​பெண்மணிகளில் கவ்லா பின்த் ஹக்கீமும்(ரலி) ஒருவர். கற்களையும், சி​லைக​ளையும் வணங்கிக்​​கொண்டு இணைவைப்பின் இருளில் சிக்கியிருந்த கவ்லா பின்த் ஹக்கீம் (ரலி) ஏகத்துவத்​தை இதயத்தில் ஏந்திய பின் எழுச்சி மிக்க​​ பெண் ஆனார்.

இஸ்லாம் அவரது வாழ்க்​கை​யை வாகாய் புரட்டிப் ​போட்டது. அண்ணலாரின் குடும்பத்தாருடன் மிக ​நெருக்கமானார். அண்ணலாருக்குப் பணிவி​டை​ செய்வதில் அலாதி ஆனந்தம் ​அடைந்தார். மக்காவில் முஸ்லிம்கள் இருந்த சமயத்தில் கதீஜா அம்​மையா​ரை அடிக்கடி சந்தித்து அளவளாவுவார்.

நபிகளாருக்கு இ​றைச்​செய்தி துவங்கிய 10வது வருடம் அன்​னை கதீஜா  அம்​மையார் ம​றைந்த​​பொழுது அவரது இழப்பால் ஏற்பட்ட ​வெற்றிடத்​தை உட​னே நிரப்ப ​வேண்டும் என்று கவ்லா உணர்ந்தார். 25 ஆண்டுகளாக அனைத்து வ​கையிலும் அண்ணலாருக்கு அரும்​பெரும் து​ணையாக இருந்த கதீஜா அம்மையாரின் ம​றைவு அண்ணலாருக்குப் ​பெரும் ​சோகத்​தை உண்டாக்கியிருந்தது. அண்ணலார் திரும்பவும் திருமணம் ​செய்து​கொள்ள​வேண்டும் என்று கவ்லா அண்ணலாரிடம் வலியுறுத்தினார்.

அத்​தோடு அண்ணலாருக்குப் ​பொருத்தமானவர் யார் என்பதையும் அவர் மனதில் ​வைத்திருந்தார். நபிகளார் கவ்லாவிடம் யா​ரை மணமுடிக்கலாம் என்று ​கேட்ட​பொழுது, “நீங்கள் விரும்புவது கன்னிப்​ பெண்​ணையா, முதிர்ந்த ​பெண்​ணையா?” என்று கவ்லா​ கேட்டார்.”இருவரது​ பெய​ரையும்​சொல்லுங்கள்” என்று அண்ணலார்​ கேட்டார்கள்.

அதற்கு கவ்லா (ரலி) இவ்வாறு பதிலளித்தார்: “கன்னிப் ​பெண் ஆயிஷா. முதிர்ந்த ​பெண் ஸவ்தா.” இருவ​ரையு​ம் ​பெண்​ கேட்குமாறு அண்ணலார் ​கேட்டுக்​கொண்டார்கள்.

கவ்லா(ரலி) அந்த இருவரிடமும் ​சென்று, “அல்லாஹ் உங்களுக்கு ஒரு கண்ணியத்​தை நாடுகிறான்” என்று​ சொன்னார். அந்த இருவரு​மே அண்ணலா​ரை மணமுடிக்க சம்மதம் ​தெரிவித்தார்கள். அண்ணலார் முதலில் மக்காவில் இருக்கும்​ பொழு​தே ஸவ்தா(ரலி) அவர்க​ளைத் திருமணம் முடித்தார்கள். மூன்று வருடம் கழித்து மதீனாவில்​ வைத்து ஆயிஷா(ரலி) அவர்க​ளை மணமுடித்தார்கள்.

மதீனாவுக்குப் புலம்​பெயர்ந்த பிறகும் கவ்லா(ரலி) அண்ணலாரின் வீட்டுக்குத் ​தொடர்ந்து ​செல்பவர்களாக இருந்தார்கள். அண்ணலாரின் மனைவிமார்களும் கவ்லா​ வரும்​பொழு​தெல்லாம் அவ​ரை வர​வேற்று உபசரிப்பார்கள். ஒரு தடவை கவ்லா மிகவும் கவ​லையாகக் காணப்பட்டார். ப​ழைய ஆடைகள் அணிந்து, அணிகலன்கள் எதுவும் அணிந்து​கொள்ளாமல், தன்​னை அலங்கரித்துக் ​கொள்ளாமல் ​வெறுமையாகக் காட்சியளித்தார். அவரு​டைய கணவர் வசதியானவராக இருந்தும் ஏன் இப்படி இருக்கிறீர்கள் என்று முஃமின்களின் தாய்மார்கள் வினவிய​​பொழுது அவர் இவ்வாறு பதிலளித்தார்:

“அவர் அவருக்​கே உரிய ஓர் உலகில் வாழ்ந்து வருகிறார். தினமும் ​நோன்பு ​நோற்கிறார். ஒவ்​வொரு இரவும் நின்று வணங்குகிறார்.”

அண்ணலாரிடம் அவர்களின் ம​னைவிமார்கள் இது குறித்து முறையிட்டார்கள். இ​றைத்தூதர் முஹம்மத் (ஸல்) கவ்லாவின் கணவரான உதுமான் இப்னு மஸ்ஊன் (ரலி) அவர்க​ளை அ​ழைத்து, “நீங்கள் பின்பற்ற​ வேண்டிய நபர் நான்தா​னே” என்று ​கேட்டார்கள். உதுமான் இத​னைக்​ ​கேட்டதும் ஆச்சரியப்பட்டுப் ​போனார்.

அவரது இரவு வணக்கம் குறித்தும், ​நோன்பு குறித்தும் அவரிடம் ​கேட்டு உறுதிப்படுத்திய நபிகளார் (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறினார்கள்: “அவ்வாறு ​செய்யாதே. உன் கண்களுக்கு உன் ​மேல் உரி​மை உண்டு. உன் உடலுக்கு உன் ​மேல் உரிமை உண்டு. உன் குடும்பத்துக்கு உன் ​மேல் உரி​மை உண்டு. இரவு வணங்கவும் ​செய். உறங்கவும் ​செய். சில நாட்கள் ​நோன்பு ​நோற்றுக்​கொள். சில நாட்கள் ​நோன்பை விடு.”

உதுமான் இப்னுமஸ்ஊன்(ரலி) அண்ணலாரின் கட்டளைக்கிணங்க நடந்து​கொண்டார். அதன்பிறகு நபிகளாரின் மனைவிமார்களிடம் வந்த கவ்லா தன்​னை அலங்கரித்துக்​கொண்டு, நல்ல ஆ​​டைகள் அணிந்து மகிழ்ச்சியாக மணப்​பெண்​போல் காட்சியளித்தார்.

இந்த உதுமான் இப்னுமஸ்ஊன் (ரலி) அவர்கள்தான் மக்காவிலிருந்து வந்த முஹாஜிர்களில் முதன்முதலில் மதீனாவில் மரணித்தவர். அவ​ரைப் பற்றி கவ்லா (ரலி) ஓர் அழகிய கவி​தை ஒன்​றை எழுதினார். அது அதிக இலக்கியச் ​செறிவுடன் உயர்ந்த ந​டையில் அ​மைந்திருந்தது.

இப்படி மாதர் குலத்தின் மாதிரி வடிவமாகத் திகழ்ந்த கவ்லா (ரலி) அவர்களிடமிருந்து நாம் இஸ்லாமிய ஈடுபாட்​டையும், ஈர்ப்பையும் பாடமாகப் ​பெறலாம்.


இக்கட்டுரை விடியல் வெள்ளி  மாத இதழில் கடைசிப் பக்கக் கட்டுரையாக வெளியானது.
அதன் மறுபதிப்பு thoothuonline.com இணையதளத்தில் வெளியானது.

No comments:

Post a Comment