Friday 9 January 2015

மீடியா உலகில் முஸ்லிம்கள் – 27

பிரஸ் கவுன்சி​லை அணுகுதல்

ஊடகத்தில் எதுவும் அநீதி நடந்தால் அத​னை மு​றையிட்டு நீதி​பெறுவதற்குரிய சட்டரீதியான அதிகாரம் ​கொண்ட அ​மைப்புதான் பிரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியா. இதன் த​லைவராக ஓய்வு​ ​பெற்ற நீதிபதிகள் நியமிக்கப்படுவார்கள்.

சட்ட ரீதியான அதிகாரம் என்றவுடன் வானளாவ அதிகாரம் ​கொண்டது என்று எண்ணி விட​ வேண்டாம். அந்த அளவுக்​கெல்லாம் அதிகாரம் கி​டையாது. இருந்தாலும் பிரஸ் கவுன்சிலின் பார்​வை, கருத்துகள் மீடியா உலகில் கவனத்தில்​கொள்ளப்படுகின்றன.

பிரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியா குறித்த விவரங்களுக்குள் ​போகும் முன்பு சமீபத்தில் அதன் த​லைவராக நியமிக்கப்பட்டுள்ள முன்னாள் நீதிபதி மார்க்கண்​டேய கட்ஜு தற்​போ​தைய மீடியா குறித்துச் ​சொன்ன ஒரு சில முக்கியமான கருத்துக​ளை இங்​கே பதிவ ​செய்வது​ ​​பொருத்தமாக இருக்கும்.

பத்திரிகைகளும் டெலிவிஷன் சேனல்களும் செயல்படும் விதம் குறித்து அவர் தெரிவித்துள்ள கருத்துக்கள் மீடியா வட்டாரங்களில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளன. சி.என்.என். & ஐபிஎன் சேனலில் கரன் தாப்பர் நடத்தும் ‘’டெவில்ஸ் அட்வகேட்’’ நிகழ்ச்சியில் பங்கேற்றபோது கட்ஜு கூறிய விஷயங்கள் அ​னைவராலும் கூர்ந்து கவனிக்கப்பட்டுள்ளன.

அந்த கேள்வி & பதில் நிகழ்ச்சியின் முக்கியமான பகுதிகள் வருமாறு:

கரன் தாப்பர்: சமீபத்தில்   சில பத்திரிகை மற்றும் டீவிஆசிரியர்களை சந்தித்தபோது, ‘மீடியா  பொறுப்பில்லாமல் செயல்படுகிறது‘ என்று வருத்தப்பட்டீர்கள்.  மீடியாவின் செயல்பாடு உங்களுக்கு  ஏமாற்றம் தருகிறதா?

மார்கண்டேய கட்ஜு: ரொம்ப ஏமாற்றம் அளிக்கிறது.

மார்கண்டேய கட்ஜு: நிச்சயமாக இல்லை.கரன் தாப்பர்: உண்மையாகவா சொல்கிறீர்கள்?

மார்கண்டேய கட்ஜு: உண்மையாகவே எனக்கு மீடியா பற்றி நல்ல அபிப்பிராயம் இல்லை. மக்கள் நலனுக்காக மீடியா பணியாற்ற வேண்டும். ஆனால் அவர்கள் அப்படி இல்லை. சில நேரங்களில் மக்கள்  நலனுக்கு எதிராக செயல்படுவதையும் பார்க்கிறேன். 

கரன் தாப்பர்: உண்மையான தகவல்களை பாரபட்சம் இல்லாத முறையில் வழங்குவது மீடியாவின்  கடமை என்று அந்த சந்திப்பில் குறிப்பிட்டீர்கள். மீடியா நேர்மையாக செயல்படவில்லையா, அல்லது அது போதுமானதாக இல்லையா?

மார்கண்டேய கட்ஜு: ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். இந்தியாவின் வரலாற்றில் ஒரு மாற்றம் நேர்ந்து கொண்டிருக்கிறது. நில பிரபுத்துவ வேளாண் சமூகமாக இருந்த இந்தியா இன்றைக்கு நவீன தொழில்சார் சமுதாயமாக மாறும் காலகட்டத்தில் நாம் வாழ்கிறோம். இது வலிகள் மிகுந்த காலகட்டம். முன்பு ஐரோப்பா இதே மாற்றத்தை சந்தித்த நேரத்தில், மக்களுக்கு அந்த வலியை  குறைக்கும் வகையில் அங்குள்ள மீடியா செயல்பட்டது.  

கரன் தாப்பர்: இந்தியாவில் அப்படி  நடக்கவில்லை என்கிறீர்களா?

மார்கண்டேய கட்ஜு: இங்கே அதற்கு தலைகீழாக நடக்கிறது. ஐரோப்பாவில் ரூசோ, தாமஸ்  பய்ன், திதரோ மாதிரி எழுத்தாளர்கள் மக்களை மாற்றத்துக்கு தயார் செய்தார்கள். ‘இந்த நாட்டிலுள்ள  கடைசி சாமியாரின் குடலை உருவி அதை கடைசி மன்னனின் கழுத்தில் சுருக்கிட்டு தொங்க விடும் வரையில் மக்களுக்கு சுதந்திரம் கிடைக்காது‘ என்று முழங்கினான் பிரஞ்சு சிந்தனையாளன் திதரோ.

கரன் தாப்பர்: அவர்களோடு ஒப்பிட்டால் இந்தியாவின் வரலாற்று மாற்றத்துக்கு நமது மீடியாவின் பங்களிப்பு எப்படி?

மார்கண்டேய கட்ஜு: இந்திய மீடியா பெரும்பாலான நேரங்களில் மக்களுக்கு எதிரான நிலை எடுப்பதை பார்க்கிறேன். மூன்று விஷயங்களை உதாரணம் காட்டலாம். முதலாவது, பற்றி எரியும் உண்மையான பிரச்னைகளில் இருந்து மக்களின் கவனத்தை மீடியா திசை திருப்புகிறது. இங்கே பிரச்னைகள் எல்லாமே பொருளாதார அடிப்படையிலானவை. 

நம் மக்களில் இன்னமும் 80 சதவீதம் பேர் வறுமை, வேலையின்மை, விலைவாசி, நோய்களால்  பாதிக்கப்பட்டு வாழ்க்கை நடத்துகின்றனர். அந்த பிரச்னைகளை வெளிச்சத்துக்கு கொண்டு வந்து தீர்வு காண தூண்டாமல், பிரச்னைகளில் இருந்து திசை திருப்புகிறது மீடியா. சினிமா நட்சத்திரங்கள், அழகி போட்டி, கிரிக்கெட் மாதிரியான சமாசாரங்களை பெரிதுபடுத்தி நாட்டுக்கு அத்தியாவசியமானது அந்த விஷயங்கள்தான் என்பதுபோல் ஒரு பிரமையை உண்டாக்குகிறது.

கரன் தாப்பர்: ஃபேஷன், சினிமா, கிரிக்கெட் மேட்டரை மக்களுக்கு போதையேற்ற மீடியா பயன்படுத்துகிறது என்கிறீர்கள்?

மார்கண்டேய கட்ஜு:  ஆமாம். கிரிக்கெட் நமது ஜனங்களுக்கு ஒரு போதை  பொருள் - ஓப்பியம் மாதிரி.  ரோமாபுரி பேரரசன் சொல்வானாம், ‘மக்களுக்கு ரொட்டி கொடுக்க வழியில்லை என்றால் சர்க்கஸ் பார்க்க ஏற்பாடு செய்‘ என்று. இந்தியாவில் மக்களுக்கு தேவையானதை கொடுக்க முடியாவிட்டால் அவர்களை கிரிக்கெட் பார்க்க வைக்கிறோம். நிறைய சேனல்களில் இரவு பகல் எந்த நேரமும் ஏதாவது கிரிக்கெட் மேட்ச் ஓடிக் கொண்டே இருக்கிறது - அதுதான் நாட்டின் ஒரே பிரச்னை மாதிரி.

கரன் தாப்பர்: மக்கள் விரோதமாக மீடியா செயல்படுவதை காட்டும் இன்னும் இரண்டு விஷயங்கள் என்னென்ன?

மார்கண்டேய கட்ஜு: இரண்டாவது, அநேக நேரங்களில் மக்களை பிளவுபடுத்துகிறது மீடியா. இங்கே பலதரப்பட்ட மக்கள் வாழ்கிறார்கள். ஒருவரை ஒருவர் மதித்தால்தான் ஒற்றுமையாக நிம்மதியாக வாழ முடியும். ஆனால் என்ன நடக்கிறது? ஒரு ஊரில்  குண்டு வெடித்தால் போதும். அடுத்த ஒரு மணி நேரத்துக்குள்  ‘குண்டு வைத்தது நாங்கள்தான் என்று இந்தியன் முஜாஹிதின்  கூறுகிறது‘ அல்லது ‘ஜய்ஷ் இ முகமத் அல்லது ஹர்கத் உல்  ஜிஹாத் அமைப்பு கூறுகிறது‘ என்று ஏதோ ஒரு முஸ்லிம்  பெயரை சேனல்கள் சொல்கின்றன. அதற்குள் எப்படி  தெரியும் என்றால் எஸ்எம்எஸ். வந்தது, இமெயில் வந்தது என்று  காட்டுகிறார்கள்.

எஸ்எம்எஸ், இமெயில் எல்லாம் யார் வேண்டுமானாலும் யார் பெயரிலும் அனுப்ப முடியும். யாரோ ஒரு  விஷமி அனுப்பியிருக்கலாம். அதைப் பெரிதாக ​தொ​லைக்காட்சியில் காட்டி  மறுநாள் பத்திரிகைகளிலும்  பிரசுரிக்கும்போது  என்ன ஆகிறது? முஸ்லிம்கள் எல்லாரும் குண்டு வைப்பவர்கள்,  தீவிரவாதிகள் என்று ஒரு மதத்தையே ஒட்டுமொத்த அசுரர்கள் மாதிரி சித்தரிக்கிறது மீடியா. எந்த மதமாக  இருந்தாலும் 99 சதவீதம் பேர் நல்லவர்கள் என்பதுதான்  உண்மை.

கரன் தாப்பர்: மீடியா இந்த விஷயத்தில் கவனக்கு​றைவாக நடக்கிறது, தகவல் உண்மையா என்பதைப் பரி​​சோத​னை ​செய்யாமல் செய்தி வெளியிடுகிறது என்கிறீர்களா அல்லது வேண்டுமென்றே அப்படி  செய்வதாக நினைக்கிறீர்களா?

மார்கண்டேய கட்ஜு: மதத்தின் பெயரால் மக்களை பிளவுபடுத்த மீடியா வேண்டுமென்றே இவ்வாறு நடப்பதாக நினைக்கிறேன். நிச்சயமாக இது நாட்டு நலனுக்கு எதிரானது.

கரன் தாப்பர்: மீடியா வேண்டுமென்றே மக்களுக்குள் பிளவை உண்டாக்குவதாகவா சொல்கிறீர்கள்?

மார்கண்டேய கட்ஜு: குண்டு வெடித்த சிறிது  நேரத்தில் எஸ்எம்எஸ் வந்தது, இமெயில் வந்தது என்பதை சாக்கிட்டு ஒரு மதத்தையே வில்லனாக மீடியா சித்தரிக்கும்போது அதற்கு வேறென்ன அர்த்தம் கொடுக்க முடியும்?

மார்க்கண்​​டேய கட்ஜு ​கொடுத்த விரிவான ​பேட்டியில் மீடியா குறித்தும், மீடியா முஸ்லிம்க​ளைப் பார்க்கும் விதம் குறித்தும் ​சொன்ன கருத்துக​ளை மட்டும் இங்​கே சுட்டிக்காட்டியுள்​ளோம்.

மிகப் ​​பெரிய பதவியிலுள்ள, முஸ்லிமல்லாத ஒருவர் இந்திய மீடியா குறித்து​சொன்ன இந்தக் கருத்துக​ளை மீடியா எந்த அளவுக்கு உட்​கொண்டுள்ளது என்று தெரியவில்​லை. ஏ​னெனில் ​முஸ்லிம்களின் ​மேல் அ​தே பாரபட்சமும், தவறான பார்​வையும் ​தொடர்ந்து ​கொண்​​​டேதான் இருக்கிறது.

இனி பிரஸ் கவுன்சில் பற்றிப் பார்ப்​போம்.

No comments:

Post a Comment