Saturday 28 September 2013

குழந்​தைக​ளைக் குறி ​வைக்கும் விளம்பரங்களும், விபரீதங்களும்!


"வாப்பா…! ஹார்லிக்ஸ் வாங்காம வந்துடாதே…" - சாமான்கள் வாங்குவதற்காக புறப்பட்டுக்கொண்டிருந்த தந்தையை நோக்கி 6 வயது மகன் கூறினான்.

ஹார்லிக்ஸ் விலையை யோசித்தபோது மனம் தயங்கினாலும், தந்தைக்கு உள்ளூர ஒரு பூரிப்பு. சாக்லேட் தவிர வேறெதையும் இதுவரை கேட்டிராத பிள்ளை, இன்று சத்தான ஆகாரமான ஹார்லிக்ஸ் வாங்கிக் கேட்கிறானே…

"ஹார்லிக்ஸ் வாங்கித் தரேன். பாலில் கலந்து தந்தால் மடக்கு மடக்குன்னு குடிக்கணும் என்ன…" – இது தந்தை.

உடனே மகன் சொன்னான்: "பாலில் கலக்கி நீயும், உம்மாவும் குடிச்சுக்கங்க. எனக்கு அந்த டிஜிட்ரோனிக்ஸ் வாட்ச் போதும்."

"டிஜிட்ரோனிக்ஸ் வாட்சா…?"

"ஆமா. டி.வி.யில விளம்பரம் பார்க்கலையா? அந்த வாட்ச் என்னா அழகா இருக்கு…! கையில கட்டுனா சூப்பரா இருக்கும்." – மகன் சொல்லி விட்டு துள்ளிக் குதித்தான். வாப்பா வாயடைத்துப் போனார்.

மிட்டாய் வாங்கித் தரவேண்டும், பிஸ்கட் வாங்கித் தர வேண்டும் என்று பிடிவாதம் பிடிப்பது குழந்தைகளுக்குப் புதிதல்ல. ஆனால் அந்தக் காலமெல்லாம் மலையேறி வருகிறது. இன்று வெறுமனே ஒரு சாக்லேட்டையோ, பிஸ்கட்டையோ வாங்கிக் கொடுத்து குழந்தைகளைத் திருப்திப்படுத்திட முடியாது. அவர்களுக்கு இஷ்டப்பட்ட கம்பெனி, இஷ்டப்பட்ட பிராண்ட் தின்பண்டங்கள்தான் வாங்கிக் கொடுக்கவேண்டும்.

இதற்குக் காரணம் இன்று பரவலாகியிருக்கும் விளம்பரங்கள். குறிப்பாக குழந்தைகளைக் குறி வைக்கும் டி.வி. விளம்பரங்கள். அதில் வரும் ஒவ்வொரு காட்சியும் குழந்தைகளின் மனங்களில் ஆழப் பதிந்து விடுகின்றன.

"எனக்கு நெஸ்லே சாக்லேட்டுதான் ரொம்பப் பிடிக்கும். விளம்பரத்தில் வர்ற நாய்க்குட்டி உடம்புல நட்சத்திரம் மின்னுறது எவ்வளவு அழகா இருக்கு…?" என்று இரண்டாம் வகுப்பு படிக்கும் குழந்தை சொல்கிறது. அக்குழந்தை நெஸ்லே சாக்லேட் இல்லாமல் பள்ளிக்கூடமே போவதில்லை.

சாக்லேட்டும், பிஸ்கட்டும் போய் இன்று ஆடைகள் விஷயத்திலும் குழந்தைகளை ஆட்டிப் படைக்கிறது விளம்பரங்கள்.

விளம்பரங்களில் வரும் வாசகங்கள் குழந்தைகளின் உள்ளங்களில் அப்படியே பதிந்து விடுகின்றன.

"Boost is the secret of my energy" என்று சச்சின் டெண்டுல்கர் விளம்பரத்தில் சொன்னாலும் சொன்னார். இங்கே நமது வீடுகளில் எல்.கே.ஜி. குழந்தைகள் கையில் டம்ளரைப் பிடித்துக்கொண்டு, புஷ்டியைக் காட்டிக்கொண்டு அப்படியே சச்சின் மாதிரி சொல்கின்றன.

இப்போதுள்ள முக்கிய வியாபாரத் தந்திரமே இதுதான். குழந்தைகளுக்குப் பிடிக்கும் பொருட்களை "இலவசம்" என்று இணைத்துக் கொடுப்பது. அப்போதுதான் குழந்தைகள் பெற்றோர்களை நச்சரித்து அந்தச் சாமான்களை வாங்கச் சொல்வார்கள்.

சில பொருட்கள் வாங்கினால் 'டாடூஸ்" (Tatoos) என்ற கையிலும், உடம்பிலும் ஒட்டும் பொருட்களை இலவசமாகக் கொடுக்கிறார்கள். குழந்தைகளுக்கு ரொம்பப் பிடிக்கும் கார்ட்டூன் கதாபாத்திரங்களும், மிருகங்களும், குத்துச்சண்டை வீரர்களின் படங்களும் இன்று டாடூஸாகக் கிடைக்கின்றன. நமக்கே தெரியாத, வாயில் நுழையாத பெயர்களையெல்லாம் குழந்தைகள் சரளமாகச் சொல்கின்றன.

கிஸான் (Kissan) ஜாம் வாங்கினால் "போக்கிமான்" கார்டு இலவசம்.

லேய்ஸ் (Lays) வாங்கினால் சேகரித்து வைக்குமாறு தூண்டுகிற டாடூஸ் இலவசம்.

இவைகளெல்லாம் குழந்தைகளிடத்தில் மிகப் பிரபலம்.

டி.வி.எஸ். விக்டர் என்ற இரு சக்கர வாகனம் வந்த புதிதில், "நீ பெரியவனானால் என்ன வண்டி வாங்குவாய்?" என்று ஒரு குழந்தையிடம் கேட்க, "டி.வி.எஸ். விக்டர் வாங்குவேன்" என்று சட்டென்று பதில் வந்தது.

ஏன் என்று கேட்க வாயைத் திறக்கும் முன்பே அடுத்த பதில் வந்தது: "அது டெண்டுல்கர் வண்டி. அவர்தான் எனக்குப் பிடித்த ஸ்டார்!"

பெற்றோர்கள் ஷாப்பிங் செல்லும்பொழுது பிள்ளைகளும் கூடச் செல்கின்றன. பெற்றோர்கள் தங்கள் ‘பட்ஜெட்டு’க்கேற்ப பொருட்களை விலையைப் பார்த்துப் பார்த்து வாங்குவதில் மும்முரமாக இருப்பார்கள்.

பிள்ளைகளின் கண்களோ ஆவலாய் அங்கும் இங்குமாக அலை பாய்ந்து கொண்டிருக்கும். டி.வி.யில் பார்க்கும் விளம்பரப் பொருட்களைத் தேடிக் கொண்டிருக்கும்.

இதனால் சில சூப்பர் மார்க்கெட்டுகளில் 'கிட்ஸ் ட்ராலி' என்று குழந்தைகளுக்குத் தனியாக ட்ராலி வைத்திருக்கிறார்கள்.

ஷாப்பிங் மட்டுமல்ல. விடுமுறை தினங்களில் எங்கே 'பிக்னிக்' எனும் சிற்றுலா செல்லவேண்டும் என்று இப்பொழுதெல்லாம் தீர்மானிப்பது குழந்தைகள்தான்.

கிஷ்கிந்தாவோ, எம்.ஜி.எம்.மோ, அதிசயமோ, பிளாக் தண்டரோ… எல்லாம் குழந்தைகள் கையில்!

அத்தோடு இன்று டி.வி. விளம்பரங்களில் குழந்தைகளே முக்கிய கதாபாத்திரங்கள்.

குழந்தைகளுக்குக் கொஞ்சமும் சம்பந்தமில்லாத சோப்புகள், மருந்துகள், ஏன், வங்கிகள், செல்போன்கள் விளம்பரங்களிலும் குழந்தைகள்தான் முக்கிய கதாபாத்திரங்கள்.

பால் வடியும் குழந்தைகளின் முகங்கள் அனைவருக்கும் பிடிக்கும். அத்தோடு குழந்தைகளும் அந்த விளம்பரங்களை விரும்பிப் பார்க்கின்றன. ஆதலால் விளம்பரத்தில் இப்படியொரு தந்திரத்தைக் கையாளுகின்றனர்.

ஒரு குழந்தை ஒரு விளம்பரத்தை விரும்பிப் பார்க்கிறது என்றால் அதற்கு அடுத்த கட்டம் என்பது அந்தப் பொருள் தன் வீட்டில் இருக்க வேண்டும் என்று அது விரும்புவததான். உடனே பெற்றோர்களை அது நச்சரிக்க ஆரம்பித்து விடுகிறது.

இப்படி அந்தப் பொருளின் விற்பனை அதிகரிக்கின்றது. இதற்காகத்தான் விளம்பரங்கள் அனைத்தும் குழந்தைகளைக் குறி வைத்து வெளிவருகின்றன.

அதிகமாக ​தொ​லைக்காட்சி​யைப் பார்ப்பதனால் ஏற்படும் பாதிப்புகளில் சிலவற்​றைத்தான்​ மே​லே கண்​டோம்.

​தொடர்ந்து ​தொ​லைக்காட்சி​யைப் பார்க்கும் குழந்​தைகளுக்கு ஒருமுகத்திறன் (Concentration Power) படு​வேகமாகக் கு​றைகிறது என்று ஒரு புள்ளி விவரம் கூறுகிறது. அந்தக் குழந்​தைகளால் வகுப்புகளில் ​தொடர்ந்து பாடங்க​ளைக் கவனிக்க முடியவில்​லை.

​குழந்​தைகள் அவர்களுக்குப் பிடித்தமான கார்ட்டூன் படங்க​ளைப் பார்ப்பதில் தவறில்​லை. ஆனால் ஒரு நா​ளைக்கு குறிப்பிட்ட மணித்துளிகள்தான் ​தொ​லைக்காட்சி​யைப் பார்க்க​ குழந்​தைக​ளை அனுமதிக்க​வேண்டும். இதில் ​​பெற்​றோர்கள் எப்​பொழுதும் மிகக் கண்டிப்பாக இருக்க ​வேண்டும்.

​பொது அறி​வை வளர்க்கக் கூடிய ​சேனல்க​ளையும், அறிவியல் ​சேனல்க​ளையும் பார்க்க குழந்​தைகளுக்கு ஆர்வம் ஊட்ட ​வேண்டும். கார்ட்டூன் க​தைக​ளை ​தொ​லைக்காட்சியில் பார்ப்ப​தை விட புத்தகமாகப் படிக்கக் ​கொடுத்தால் இன்னும் நல்லது. இது குழந்​தைகளின் வாசிப்புப் பழக்க​த்​தை அதிகரிக்கும்.

​தொ​லைக்காட்சி​யை அதிகமாகப் பார்க்கும் குழந்​தைகள் அதி​லே​யே மும்முரமாக ஒன்றிப்​ ​போய் விடுவ​தைப் பார்க்கி​றோம். அந்தச் சமயத்தில் ​வெளியிலிருந்து யாரும் வீட்டுக்கு வந்தாலும் குழந்​தைகள் அவர்களிடம் முகம்​​கொடுத்துப்​ பேசுவதில்​லை. ​வைத்த கண் வாங்காமல்​ தொ​லைக்காட்சி​யை​யே பார்த்துக்​ ​கொண்டிருக்கும்.

இப்படி பிறரிடம் முகம் ​கொடுத்துப் ​பேசாமல் வளரும் குழந்​தைகள் கூச்ச சுபாவம் உ​டையவர்களாகவும், தன்னம்பிக்​கை கு​றைந்தவர்களாகவும் பிற்காலத்தில் இருப்பார்கள் என்று கண்டறிந்துள்ளார்கள்.

இவர்களால் ஒரு கூட்டத்தி​லோ​ மே​டையி​லோ​ பேச​வே முடியாது. திருமணம் ​போன்ற மக்கள் கூடும் இடங்களில் இவர்கள் ஒதுங்கி​யே இருப்பார்கள். வி​ரைவில் அந்த இடத்​தை விட்டு அகல​வே முயல்வார்கள். எந்தக் காரியத்​தைச் ​செய்ய எண்ணினாலும் அவர்களுக்கு முதலில் வருவது தயக்கம்! இது தன்னம்பிக்​கைக் கு​றைவினால் ஏற்படுவது.

பிற்காலத்தில் குழந்​தைகள் இப்படி பாதிப்ப​டையாமல் இருக்க நாம் இப்​​பொழு​தே கவனமாக இருக்க ​வேண்டும். வீட்டுக்கு விருந்தாளி​க​ளோ​ தெரிந்தவர்க​ளோ வந்தால் அவ்வமயம் குழந்​தைகள்​ தொ​லைக்காட்சி​யைப் பார்த்துக் கொண்டிருந்தால் உட​னே நாம் ​செய்ய ​வேண்டியது - அத​​னை அ​ணைப்பதுதான்!

அத்​தோடு வீட்டுக்கு வந்தவர்களிடம் குழந்​தைக​ளை அ​ழைத்து அறிமுகப்படுத்த ​வேண்டும். அப்படி அறிமுகப்படுத்தும் ​பொழுது குழந்​தைக​ளிடம் உள்ள நல்ல குணங்க​ளையும், அவர்கள் ​செய்த நல்ல காரியங்க​ளையும் ​சொல்லிக் காட்ட ​வேண்டும்.

வீட்டுக்கு வந்த விருந்தாளிகளின் ​நேரத்தில் சிறி​தை இப்படி குழந்​தைகளுக்காகவும் நாம் எடுத்துக்​ ​கொள்ள​ வேண்டும். இது குழந்​தைகளுக்கு உள்ளூற தன்னம்பிக்​கை​யை ஏற்படுத்தும். அத்​தோடு குழந்​தைகள் அந்நியர்களுடன் அளவளாவும் ​பொழுது அவர்களது கூச்ச சுபாவமும் ​மெல்ல​ மெல்ல ம​றையும்.

இந்தப் பழக்கம் குழந்​தைகளின் எதிர்காலத்​தை ஒளி மிக்கதாக ஆக்கும்!


இக்கட்டுரை kayalpatnam.com இணையதளத்தில் வெளியானது.

No comments:

Post a Comment