Tuesday 7 November 2017

கணக்கு சொல்வாயா கண்ணாளா?


பணமதிப்பிழப்பு செய்தாய்
பாமரர்களை படுகுழியில் தள்ளினாய்
வங்கி வாசலில்
பரம ஏழைகளையும் பரிதவிக்க விட்டாய்
பண முதலைகளுக்கு பட்டுக் கம்பளம் விரித்து
பணக்கொழுப்பைப் பரிசாக்கினாய்
பயங்கரவாதத்தை ஒழிப்பேன் என்றாய் – நீ
நோட்டின் பெயரால் கொன்றாய் – உன் பரிவாரம்
மாட்டின் பெயரால் மனிதனைக் கொல்கிறான்
வெறுப்பை விதைத்து வெப்பத்தைக் கூட்டுகிறான்
பகைமை பாசிசத்தை வளர்த்து
மக்களைப் பிளவு படுத்துகிறான் - ஆக
பயங்கரவாதம் கூடியல்லவா இருக்கிறது…!
கறுப்புப் பணத்தை ஒழிப்பேன் என்றாய்
எத்தனை கோடி பிடித்தெடுத்தாய்? - இது
கறுப்பு நாளல்ல – நீ
கணக்கு சொல்லவேண்டிய நாள்…!




No comments:

Post a Comment