Friday 3 November 2017

யார் வெற்றியாளர்கள்?

வெற்றி.
அல்லாஹ் அருள்மறையில் 40க்கும் மேற்பட்ட
இடங்களில் பதிந்துள்ள சொல்.
தினமும் ஐவேளை பாங்கொலியின் மூலம்
வெற்றியின் பக்கம் அழைப்பு.
வெற்றியை விரும்பாதோர் எவருமிலர்.
வெற்றி வேண்டும் எல்லோருக்கும்.
வெற்றியின் வழிகள் என்னென்ன?

الَّذِيْنَ يُؤْمِنُوْنَ بِالْغَيْبِ وَ يُقِيْمُوْنَ الصَّلٰوةَ وَمِمَّا رَزَقْنٰهُمْ يُنْفِقُوْنَۙ‏ 

(பயபக்தியுடைய) அவர்கள், (புலன்களுக்கு எட்டா) மறைவானவற்றின் மீது நம்பிக்கை கொள்வார்கள்; தொழுகையையும் (உறுதியாக முறைப்படிக்) கடைப்பிடித்து ஒழுகுவார்கள்; இன்னும் நாம் அவர்களுக்கு அளித்தவற்றிலிருந்து (நல்வழியில்) செலவும் செய்வார்கள். (2:3)

وَالَّذِيْنَ يُؤْمِنُوْنَ بِمَۤا اُنْزِلَ اِلَيْكَ وَمَاۤ اُنْزِلَ مِنْ قَبْلِكَۚ وَبِالْاٰخِرَةِ هُمْ يُوْقِنُوْنَؕ‏ 

(நபியே!) இன்னும் அவர்கள் உமக்கு அருளப்பெற்ற (வேதத்)தின் மீதும் உமக்கு முன்னர் அருளப்பட்டவை மீதும் நம்பிக்கை கொள்வார்கள்; இன்னும் ஆகிரத்தை(மறுமையை) உறுதியாக நம்புவார்கள். (2:4)

اُولٰٓٮِٕكَ عَلٰى هُدًى مِّنْ رَّبِّهِمْ‌ وَاُولٰٓٮِٕكَ هُمُ الْمُفْلِحُوْنَ‏ 

இவர்கள் தாம் தங்கள் இறைவனின் நேர்வழியில் இருப்பவர்கள்; மேலும் இவர்களே வெற்றியாளர்கள். (2:5)

வெற்றியின் முதல் படி இறைநம்பிக்கை.
மறைவானவற்றின் மீது விசுவாசம் வெற்றியை நோக்கி இட்டுச் செல்லும்.
அடுத்தது தொழுகையை நிலைநாட்டுதல்.
அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்தல்.

 ؕ فَالَّذِيْنَ اٰمَنُوْا بِهٖ وَعَزَّرُوْهُ وَنَصَرُوْهُ وَ اتَّبَـعُوا النُّوْرَ الَّذِىْۤ اُنْزِلَ مَعَهٗ ۤ‌ ۙ اُولٰۤٮِٕكَ هُمُ الْمُفْلِحُوْنَ

எனவே எவர்கள் அவரை மெய்யாகவே நம்பி, அவரைக் கண்ணியப்படுத்தி, அவருக்கு உதவி செய்து, அவருடன் அருளப்பட்டிருக்கும் ஒளிமயமான (வேதத்)தையும் பின் பற்றுகிறார்களோ, அவர்கள் தாம் வெற்றி பெறுவார்கள். (7:157)

அல்லாஹ்வின் கட்டளைகளுக்கு அடிபணிந்து வாழ்தல்.
அல்லாஹ் தடுத்தவற்றிலிருந்து விலகியிருத்தல்.

يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا ارْكَعُوْا وَاسْجُدُوْا وَ اعْبُدُوْا رَبَّكُمْ وَافْعَلُوْا الْخَيْرَ لَعَلَّكُمْ تُفْلِحُوْن ۚ‏ 

ஈமான் கொண்டவர்களே! நீங்கள் ருகூஃ செய்யுங்கள்; இன்னும் ஸஜ்தாவும் செய்யுங்கள்; இன்னும் உங்கள் இறைவனை வணங்குங்கள்; மேலும்: நீங்கள் வெற்றி பெரும் பொருட்டு, நன்மையே செய்யுங்கள். (22:77)

நாளை மறுமையில் முதல் கேள்வி தொழுகையைப் பற்றித்தான்.
அது நல்ல பதிலாக அமைந்தால் பின்னர் வரும் கேள்விகள் எளிதாக அமையும்.
அவன் வெற்றி பெற்றவனாவான்.

فَاٰتِ ذَا الْقُرْبٰى حَقَّهٗ وَ الْمِسْكِيْنَ وَابْنَ السَّبِيْلِ‌ؕ ذٰلِكَ خَيْرٌ لِّلَّذِيْنَ يُرِيْدُوْنَ وَجْهَ اللّٰهِ‌ وَاُولٰٓٮِٕكَ هُمُ الْمُفْلِحُوْنَ‏ 

ஆகவே, உறவினர்களுக்கு அவர்கள் பாத்தியதையைக் கொடுத்து வருவீராக. அவ்வாறே ஏழைகளுக்கும், வழிப்போக்கர்களுக்கும் (அவரவர்க்குரியதை கொடுத்து வருவீராக); எவர்கள் அல்லாஹ்வின் திருப் பொருத்தத்தை நாடுகிறார்களோ அவர்களுக்கு இது மிக்க நன்மையுடையதாகும்; அவர்கள்தாம் (அவ்வாறு கொடுத்து வருபவர் தாம்) வெற்றியாளர்களாவார்கள். (30:38)

நற்கருமங்கள் செய்து நன்மைத் தட்டின் கனம் கூடினால்
வெற்றி.
நற்குணங்கள் வெற்றியை நல்கும்.

فَاذْكُرُوْۤا اٰ لَۤاءَ اللّٰهِ لَعَلَّكُمْ تُفْلِحُوْنَ
‏ 
எனவே அல்லாஹ்வின் அருட்கொடைகளை எல்லாம் நினைத்துப் பாருங்கள்; நீங்கள் வெற்றி பெறுவீர்கள்” (என்றும் கூறினார்). (7:69)

அல்லாஹ் நமக்களித்த அருட்கொடைகளை எண்ணிப் பார்ப்பது வெற்றிக்கனியைப் பறித்துத் தரும்.
பயனுள்ள கல்வியை, அறிவைத் தேடினால் வெற்றி கிட்டும்.

03.11.2017 - இன்றைய அமீரக ஜும்ஆ உரையிலிருந்து.

No comments:

Post a Comment