Wednesday 19 March 2014

“வேர்கள்” & “எனது பயணம்” நூலாய்வு விழா!


கடந்த 16.03.2014 ஞாயிறன்று காயல் பட்டினம் துளிர் பள்ளி அரங்கில் “வேர்கள்” & “எனது பயணம்” நூலாய்வு விழா வெகு சிறப்பாக நடைபெற்றது.

“The Road to Makkah” எனும் தலைப்பிலான நூலை, காயல் பட்டினத்தைச் சேர்ந்த ஹாஜி எஸ்.ஓ. அபுல்ஹஸன் கலாமீ - “எனது பயணம்” எனும் தலைப்பில் தமிழில் மொழிபெயர்த்துள்ளார். “Roots” எனும் ஆங்கில புதினத்தை நான் “வேர்கள்” எனும் தலைப்பில் மொழிபெயர்த்துள்ளேன்.




உலகப் புகழ் பெற்ற இந்த நூல் மொழியாக்கங்களின் அறிமுகம் மற்றும் ஆய்வுரை விழா, இம்மாதம் 16ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமையன்று 16.30 மணிக்கு, துளிர் பள்ளி காணொளிக் கூடத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது.

“வேர்கள்” நூலை முனைவர் A. அஷ்ரஃப் அலீ (இணை பேராசிரியர், வரலாற்றுத் துறை, ஸதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி, நெல்லை) அவர்களும், “எனது பயணம்” நூலை முனைவர் A. நிஃமத்துல்லாஹ் (தலைவர், ஆங்கிலத் துறை, ஸதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி, நெல்லை) அவர்களும் ஆய்வு செய்து விழாவில் நூலாய்வுரை நிகழ்த்தினார்கள்.


நான் துபையில் இருப்பதால் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள முடியவில்லை. ஆதலால் நூலைப் பற்றிய அறிமுகவுரையை “வேர்கள்” நூலை நான்கு முறை படித்து முடித்துவிட்ட காயல் அமானுல்லாஹ் அவர்கள் நிகழ்த்தினார்கள்.

நான் துபையிலிருந்து தொலைபேசி மூலம் சிறிது நேரம் உரையாற்றினேன். அது விழாவில் ஒலிபெருக்கி மூலம் ஒலிபரப்பப்பட்டது.

ஹாஜி எஸ்.ஓ. அபுல்ஹஸன் கலாமீ அவர்களுக்கும், எனக்கும் நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன. எனக்கு வழங்கப்பட்ட நினைவுப் பரிசினை என் சார்பாக என் மாமனார் MIW முஹம்மது இஸ்மாஈல் அவர்களும், என் இளைய மகன் முஹம்மது ஸஜீதும் பெற்றுக்கொண்டார்கள்.


கலந்துகொண்டவர்கள் நிகழ்ச்சி சிறப்பாக அமைந்ததாக கூறினார்கள். இந்த நிகழ்ச்சிக்குத் தூண்டுகோலாய் அமைந்த நண்பர் சாளை பஷீர் அவர்களுக்கும், நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து துளிர் பள்ளியில் சிறப்பாக நடத்தி முடித்த வழக்கறிஞர் அஹமது அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் என்றென்றும் உண்டு.

No comments:

Post a Comment