Monday 24 March 2014

ATMல் பணம் எடுக்கும்பொழுது கவனிக்க வேண்டிய ஒரு முக்கிய விஷயம்!


ATMல் பணம் எடுக்கும்பொழுது யாராவது வந்து அவர்களது கார்டைக் கொடுத்து, “எனக்கு ATMல் பணம் எடுக்கத் தெரியாது, கொஞ்சம் எடுத்துத் தாருங்களேன்” என்று கேட்டால் உடனே நல்ல பிள்ளையாக மாறி கார்டை வாங்கி அவர்களுக்குப் பணம் எடுத்துக் கொடுத்து விடாதீர்கள். எலி பொறியில் சிக்குவது போல் பிரச்னையில் சிக்கிக் கொள்வீர்கள்.

நாம் அவர்களது கார்டைக் கொண்டு பணம் எடுப்பது முழுவதும் கேமராவில் பதிவாகும். அவர்கள் அதை வைத்துக்கொண்டு, “என் வங்கிக் கணக்கில் பணம் திருடப்பட்டுள்ளது, என் கார்டைத் திருடி, என் ரகசிய எண்ணை எப்படியோ கண்டுபிடித்து இவர் பணம் எடுத்துவிட்டார்” என்று புகார் கொடுத்து பிரச்னையாக்கி விடுவார்கள். இப்படிப்பட்ட ஏமாற்றுப் பேர்வழிகளும் ஊருக்குள் அலைகிறார்கள்.  ஜாக்கிரதை!

உண்மையிலேயே பணம் எடுக்கத் தெரியாதவர்களும் நம்மிடம் உதவி கேட்கலாமல்லவா... அப்பொழுது என்ன செய்வது? யார் பணம் எடுத்துக் கேட்டாலும் நீங்கள் கார்டைக் கையில் வாங்காதீர்கள். “நான் சொல்லித் தருகிறேன், நீங்கள் எடுங்கள். அப்பொழுதுதான் நீங்கள் கற்றுக்கொள்ள முடியும்” என்று சொல்லி அவர்களையே எடுக்க வையுங்கள்.

அவருக்கு என்னென்ன செய்ய வேண்டும் என்று சொல்லிக் கொடுங்கள். உண்மையிலேயே பணம் எடுக்கத் தெரியாதவர்கள் இதன் மூலம் பணம் எடுக்க அறிந்து கொள்வார்கள். மாறாக, அவர்கள் கள்வர்களாக இருந்தால் முகத்தில் கரி பூசியது போல் ஆவார்கள்.

No comments:

Post a Comment