Saturday 24 February 2018

சாஸ்திரி வாங்கிய ஃபியட் கார்



மிகவும் எளிமையாக வாழ்ந்த இந்தியாவின் இரண்டாவது பிரதமர் லால் பகதூர் சாஸ்திரிக்கு 1964-65ல் தனது குடும்பத் தேவைக்காக ஒரு கார் வேண்டிய அவசியம் வந்தது. அன்று பெயரும், புகழும் பெற்று விளங்கிய ஃபியட் கார் வாங்குவது என்று முடிவெடுத்தார்.

அன்றைய ஃபியட் காரின் விலை ரூ. 12,000. இவருக்கு வங்கியில் ரூ. 7000 மட்டுமே இருந்தது. மீதிப் பணம் ரூ. 5000ஐ பஞ்சாப் நேஷனல் வங்கியில் கடனாக சாஸ்திரி பெற்று ஃபியட் கார் வாங்கினார். கார் எண் DLE 6.

ஆனால் எதிர்பாராவிதமாக 1966ம் ஆண்டு தாஷ்கண்ட் சென்றிருந்தபொழுது சாஸ்திரி இறந்து விட்டார். காருக்கு வாங்கிய கடனை அடைக்காமல் சாஸ்திரி இறந்துவிட்டதால் கடனை அடைக்குமாறு சாஸ்திரியின் மனைவி லலிதா சாஸ்திரிக்கு பஞ்சாப் நேஷனல் வங்கி நோட்டீஸ் அனுப்பியது.

தனக்கு வந்த பென்ஷன் தொகையை வைத்து லலிதா சாஸ்திரி அந்தக் கடனை அடைத்தார். இதே பஞ்சாப் நேஷனல் வங்கியில்தான் இன்று 11,300 கோடி ரூபாய்க்கு ஊழல் நடந்துள்ளது. அந்தக் கார் இன்று சாஸ்திரியின் நினைவு இல்லத்தில் மக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment