Saturday 24 February 2018

ஹாசினியின் தந்தையின் கதறல்



ஹாசினி கொலைவழக்கின் தீர்ப்பைக் கேட்ட பின் அவளது புகைப்படத்தைப் பார்த்து அவளின் தந்தை கதறி அழுததைக் கண்ட பொழுது எனக்கு குஜராத் நினைவுக்கு வந்தது. ஹாசினியையாவது காமக் கொடூரன் தஷ்வந்த் கடத்திக்கொண்டு போய் சீரழித்து கொன்றான். தன் கண் முன்னே நடக்காவிட்டாலும் தன் மகள் எப்படியெல்லாம் துடிதுடித்து இறந்திருப்பாள் என்றெண்ணி ஹாசினியின் தந்தை கதறுகிறார் என்றால் குஜராத்தில் இனப்படுகொலை நடந்தபொழுது தாய், தந்தையர் கண் முன்னே ஹிந்துத்துவ ஃபாசிச பயங்கரவாதிகள் பெண்களைக் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து சீரழித்து எரித்துக் கொன்றதைப் பார்த்து எப்படி துடிதுடித்திருப்பார்கள் அந்தப் பெற்றோர்கள். இன்று நினைத்தாலும் நெஞ்சமெல்லாம் நடுநடுங்குகிறதே... அந்த இனப்படுகொலையைச் செய்ய அனுமதித்து, காவல்துறையின் கைகளைக் கட்டிப்போட்டு, நடப்பவையை வேடிக்கை மட்டும் பார்க்க வேண்டும் என்று உத்தரவு போட்டவர் இன்று அரியணையில்! இப்படிப்பட்ட இழி நிலைக்கு இன்று இந்தியா தள்ளப்பட்டுள்ளது. இப்படி நம்பிக்கையிழந்து நெஞ்சம் விம்மும் நேரத்தில்தான் பாப்புலர் ஃப்ரண்ட் சேர்மன் இ. அபூபக்கர் ஸாஹிப் அவர்கள் பிப் 17, 2018 பாப்புலர் ஃப்ரண்ட் தினத்தில் திரூரில் ஆற்றிய உரை செவிகளில் ரீங்காரமிடுகிறது:
“கேரளத்திற்கும் சங்பரிவார்கள் ரதயாத்திரையுடன் வருகிறார்கள். எனினும், இங்கு நான் ஒரு விஷயத்தை சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். ஏதேனும் ஒரு சமூகத்தின் அமைதிக்கு மட்டும் பங்கம் விளைவிக்கும் சூழல் கேரளாவில் ஏற்படாது என்று நம்புகிறோம். ஏதேனும் ஒரு பிரிவினரின் ரத்தம் மட்டும் வீதிகளில் ஓடாது என்றும் நம்புகிறோம்” என்ற வார்த்தைகள் வாழும் முஸ்லிம்களுக்கு வலுவான நம்பிக்கையை ஊட்டுகின்றன.

No comments:

Post a Comment