Thursday 27 February 2014

‘கோலா’க்களினால் ஏற்படும் கோளாறுகள்!


மனிதனைப் படைத்தான் இறைவன். அவன் வாழ்வதற்கான அனைத்து வசதிகளையும் செய்து தந்தான். பூமியிலிருந்து தானியங்களை விளையச் செய்தான். வானிலிருந்து மழையைப் பொழியச் செய்தான். சுவாசிக்க சுத்தமான காற்றை வீசச் செய்தான்.

மனிதன் துவக்கத்தில் இயற்கை உணவுகளை உண்டு ஆரோக்கியமாக வாழ்ந்தான். பழங்களும், காய்கறிகளும் மனிதனுக்கு உண்ண படைக்கப்பட்ட சில கால்நடைகளும் அவனுக்கு வேண்டிய சத்துகளை அளித்தன.

இளநீர், பால் போன்றவை அவனது நீர் ஆகாரத் தேவையை செவ்வனே பூர்த்தி செய்தன. சிறுகச் சிறுக மனிதனின் ருசியும், ரசனையும் மாறியது.

இயற்கை உணவுகளைப் புறந்தள்ளி விட்டு செயற்கை உணவுகளுக்குத் தாவினான் மனிதன். சத்தான, குளிர்ச்சி தரக்கூடிய இயற்கை நீர் ஆகாரங்களை அலட்சியப்படுத்திவிட்டு செயற்கை நீர் பானங்களில் இறங்கினான். இன்று அழிவை நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றான்.

மனிதர்களின் கைகள் தேடிக்கொண்ட (தீ) வினையின் காரணமாகக் கடலிலும் தரையிலும் தீமைகள் தோன்றிவிட்டன. (அவற்றிலிருந்து) அவர்கள் விலகிக் கொள்ளும் பொருட்டு, அவர்களின் (தீ) வினைகளில் சிலவற்றை, அவர்கள் (இம்மையிலும்) சுகிக்கும்படி அவன் செய்கிறான். (அல்குர்ஆன் 30:41)

பெப்சி, கோக் ஆகியவை அமெரிக்காவிலுள்ள மிகப் பெரிய குளிர்பானக் கம்பெனிகள். இவை தயாரிக்கும் குளிர்பானங்கள் இன்று உலகம் முழுவதும் பரவலாகக் கிடைக்கின்றன.

மேலை நாட்டுக் கம்பெனிகளின் பானங்கள் என்ற கவர்ச்சி ஒரு புறம்... இந்தக் கம்பெனிகள் செய்யும் பிரம்மாண்டமான விளம்பரங்கள் இன்னொரு புறம்.

ஆம்! கடந்த 2000மாவது ஆண்டில் மட்டும், கோகோ கோலாவும், பெப்சி கோலாவும் விளம்பரத்திற்காக ரூபாய் 2,30,000 கோடி செலவிட்டுள்ளன!

ஒரு சிறய நாட்டின் ஒரு வருட வரவு-செலவுக் கணக்கின் தொகை இது. இதனை ஓராண்டுக்கு வெறும் விளம்பரத்திற்காக மட்டும் இந்நிறுவனங்கள் செலவிடுகின்றன.

இந்த இரு கம்பெனிகளும் அவற்றுக்கு இடையில் உள்ள போட்டியில் மொத்த உலக மக்களையும் பலி கொடுக்கின்றன.

ஆம்! இந்தக் குளிர்பானங்களில் உள்ள ‘காஃபின்’ என்னும் ஊக்கமூட்டும் பொருள் அனைவரையும் அதற்கு அடிமையாக்குகிறது. அது மட்டுமா? இந்தக் குளிர்பானங்களின் உள்ளே கேஸ் ஏற்றப்பட்டுள்ளது (கார்பனேட்டட்). எனவே இதனைத் தொடர்ந்து குடிப்பதால் வயிறு தொந்தியாகிறது. பல் சொத்தையாகிறது. ஊட்டச் சத்து குறைகிறது. வாஷிங்டனில் உள்ள ‘உலகக் கண்காணிப்பு நிறுவனம்’ என்ற அமைப்பின் அறிக்கை இதனைத் தெரிவித்துள்ளது.

இன்றைக்கு உலகில் தேநீர், பாலுக்கு அடுத்தபடியாக அதிகமாகப் பருகப்படுவது இந்தக் குளிர்பானங்கள்தாம். அமெரிக்காவில் இது தயாரிக்கப்படுவதால் இதற்கு முதலில் பலியானவர்கள் அமெரிக்கர்கள்தான். உலக மக்கள்தொகையில் அமெரிக்க மக்கள் 5 சதவீதம்தான். ஆனால் இந்தக் கேஸ் ஏற்றப்பட்ட குளிர்பானங்களைக் குடிப்பதில் முதலிடத்தில் இருப்பவர்கள் அமெரிக்கர்கள்.

உலகம் முழுவதும் குடிக்கப்பட்ட மொத்த குளிர்பானத்தில் மூன்றில் ஒரு பங்கைக் குடித்துத் தீர்த்தவர்கள் அமெரிக்கர்கள். 1999ம் ஆண்டுக் கணக்குப்படி சராசரியாக ஆண்டுக்கு 211 லிட்டர் குளிர்பானத்தை அமெரிக்கர்கள் குடித்துள்ளனர்.

இதில் வேடிக்கையும் வேதனையும் என்ன தெரியுமா? அவர்கள் குடித்த தண்ணீரின் அளவு சராசரியாக 109 லிட்டர்தான். ஆனால் இந்த்க் குளிர்பானங்கள் 211 லிட்டர் குடித்துள்ளனர்.

வாழ்வதாராமான தண்ணீரை விட இந்தச் செயற்கைக் குளிர்பானங்களை இரு மடங்கு குடிக்கின்ற கேடுகெட்ட நிலையைப் பாரீர்!

மேலை நாடுகளோடு, அமெரிக்காவோடு இந்தச் சனியன் இருந்துவிட்டால் பரவாயில்லை. ஆனால் உலகம் முழுவதுமல்லவா இது தொடர்ந்து பரவுகிறது...!

குறிப்பாக, அரபு நாடுகளிலும், இந்தியாவிலும், வளர்ந்து வரும் ஏழை நாடுகளிலும் இந்தக் குளிர்பானங்களைக் குடிப்பது அதிகரித்து வருகிறது. மெல்ல மெல்ல உலக மக்கள் இதற்கு அடிமையாகி வருகின்றனர். உலகின் மக்கள்தொகையில் 20 சதவீதம் பேரைக் கொண்ட சீனா, குளிர்பானம் குடிப்பதில் 4வது இடத்தில் உள்ளது.

பழச்சாறுகள், பால் போன்றவற்றில் வைட்டமின்கள், கால்சியம் போன்ற தாது உப்புகள் அதிகம் உள்ளன. இது நமது உடலுக்கு ஊட்டச்சத்தையும், ஊக்கத்தையும் தருகின்றன. ஆனால் கேஸ் ஏற்றப்பட்ட இந்தக் குளிர்பானங்களிலோ தண்ணீர், இனிப்புச் சுவை, தனி மணம் மற்றும் காஃபின் ஆகியவைதான் உள்ளன.

உடலுக்கு ஊக்கமூட்டும் செயலைச் செய்யும் ‘காஃபினை’ ஒரு நாளைக்கு 100 மில்லி கிராம் வீதம் பயன்படுத்தினால், அதற்கு மனிதன் அடிமையாகிவிடுவான்.

கார்பனேட்டட் குளிர்பானத் துறையில் 10 பிராண்டுகள் உலகில் பிரபலமானவை. அவற்றில் 80 சதவீத பானங்களில் காஃபின் சேர்க்கப்பட்டுள்ளது. இது 1999ல் எடுத்த ஆய்வில் தெரிய வந்தது.

355 மில்லி லிட்டர் கோகோ கோலாவில் 35 மில்லி கிராம் காஃபின் உள்ளது என்றும் அந்த ஆய்வு கூறுகிறது.

உலகம் முழுவதும் இந்தக் கம்பெனிகள் தங்களது கிளைகளைப் பரப்பி வருகின்றன. அந்தந்தப் பகுதிகளில் இந்தக் கிளைகளை நிறுவி, அங்கேயே குளிர்பானத் தயாரிப்புகளைத் தொடங்கி விடுகின்றன. இதனால் சுற்றுச் சூழலும் கெடுகிறது.

அண்மையில் கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டத்தின் கிராம மக்கள் கோகோ கோலா கம்பெனிக்கெதிராக போராட்டங்களை நடத்தினர். பிளச்சிமாடா என்ற கிராமத்தில் கோகோ கோலா கம்பெனி குளிர்பான ஆலை ஒன்றை நிறுவியுள்ளது. தனக்குத் தேவையான தண்ணீரை ஏரளாமான ஆழ்துளைக் கிணறுகளைத் தோண்டி எடுத்து வருகிறது இந்தக் கம்பெனி.

இதனால் 10 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு கிராமங்களில் கிணறுகளில் தண்ணீர் வற்றிவிட்டது. தினமும் 15 லட்சம் லிட்டர் தண்ணீரை கோகோ கோலா நிறுவனம் பூமியிலிருந்து உறிஞ்சுகிறது என்று அந்தக் கிராமத்தினர் கூறுகின்றனர். (செய்தி ஆதாரம்: தினமணி 22.06.2002)

இப்படி, உலக மக்களில் பெரும்பாலானோர் அடிமையாக்குவது மட்டுமல்லாமல், பூமியிலிருந்து தேவைக்கதிகமாக நீரை உறிஞ்சி, சுற்றுச் சூழலுக்கும் கேடு விளைவிக்கின்றன இந்தக் குளிர்பானக் கம்பெனிகள்.

அரபு நாடுகளில் இன்று இதன் ஆதிக்கம் அதிகரித்து வருகின்றது. இன்று அராபியர்களின் ஒவ்வொரு வேளை உணவிலும் இந்தக் கோலாக்கள் இடம் பெறுகின்றன. இந்தக் குளிர்பானங்களை அருந்தாமல் ஒரு ரொட்டித் துண்டு கூட உள்ளே இறங்காது என்ற நிலைதான் அங்குள்ளது. இன்னும் சொல்லப் போனால், இந்தக் குளிர்பானங்களின்றி உணவே ஜீரணிக்காது என்ற நிலையே இன்று அங்குள்ளது.

ஏகாதிபத்தியவாதிகள் கத்தியின்றி, இரத்தமின்றி முஸ்லிம்களை இதன் மூலம் அடிமைப்படுத்தி வருகின்றனர். செல்வச் செழிப்பில் ஊறித் திளைக்கும் அரபு நாடுகளுக்கு இது புரியவா போகிறது?
தங்களது விலை மதிக்க முடியாத கறுப்புத் தங்கமான பெட்ரோலைத் தாரை வார்த்து, இந்தக் குளிர்பானங்களைத் தருவிக்கின்றன இந்த நாடுகள்.

இதில் இன்னொரு மிகப் பெரும் கொடுமையும் உண்டு. இந்தக் குளிர்பானக் கம்பெனிகளை நடத்துபவர்கள் யூத பணக்கார முதலைகள். இந்தக் குளிர்பானங்கள் மூலம் வரும் கொள்ளை லாபத்தில் ஒரு பெரும் பங்கை இவர்கள் அல்லும் பகலும் முஸ்லிம்களைக் கொன்று குவிக்கும் இஸ்ரேலுக்கு அனுப்புகின்றனர்.

இன்று ஃபலஸ்தீனில் சொந்த மண்ணின் மைந்தர்கள் வீடின்றி, வாசலின்றி அகதிகளாக்கப்படுகின்றனர். உலகிலேயே அகதிகளாக அதிகமாக வாழ்பவர்கள் ஃபலஸ்தீன முஸ்லிம்கள்தான். யூத பயங்கரவாதிகள் தினமும் முஸ்லிம்களைத் தாக்கி வருகின்றனர். நவீன ஆயுதங்களைக் கொண்டு முஸ்லிம்களைக் கொன்று குவித்து வருகின்றனர்.

இந்த ஆயுதங்களை வாங்குவதற்குத்தான் இந்தக் குளிர்பானக் கம்பெனிகள் பெருமளவில் இஸ்ரேலுக்கு பொருளுதவி செய்து வருகின்றன. ஆதலால்தான் யூசுஃப் அல் கர்ளாவி போன்ற பெரும் இஸ்லாமிய அறிஞர்கள் பெப்சி, கோகோ கோலா போன்ற குளிர்பானங்களை அருந்தக் கூடாது என்று தீர்ப்பளித்தனர்.

“நீ ஒரு லிட்டர் கோலா வாங்கினால் ஒரு முஸ்லிமைக் கொல்ல ஒரு குண்டை வாங்குகிறாய் என்று அர்த்தம்!” என்று அறிவுறுத்தினார் அறிஞர் யூசுஃப் அல் கர்ளாவி.

உடலுக்குத் தீங்கு விளைவிக்கின்ற எந்தவொரு பொருளையும் இஸ்லாம் தடை செய்கின்றது. இந்தக் குளிர்பானங்கள் உடலுக்கு மட்டுமா தீங்கு விளைவிக்கின்றன? சுற்றுச் சூழலைச் சீர்கெடுக்கின்றன. ஒரு பெருங் கூட்டம் மக்களை அடிமையாக்குகின்றன. எல்லாவற்றிற்கும் மேலாக ஒரு சமூக மக்களைக் கொன்றொழிப்பதற்கு உதவுகின்றன.

ஆதலால் முஸ்லிம்கள் இவற்றை விட்டும் தூரமாகிவிட வேண்டும். இதனை ஒரு பிராச்சாரப் பணியாக மேற்கொண்டு அனைவருக்கும் அறிவுறுத்த வேண்டும். விழிப்புணர்வூட்ட வேண்டும்.

MSAH

விடியல் வெள்ளி, ஆகஸ்ட் 2002 (இம்பாக்ட் பக்கம்)

No comments:

Post a Comment