Thursday 12 January 2017

பர்வின் பானு அனஸ் அவர்களின் “துரோகி” அனுபவம்! (முகநூல் பதிவு)



நீண்ட காலங்களுக்கு பிறகு வழமையான புதியதொரு அனுபவம்.

காலையில் எடுத்த புத்தகம் கையை விட்டு இறங்க மறுத்தது. முடித்துவிட்ட பின் இனந்தெரியாத சோகமும் கையறுநிலையும் மகிழ்ச்சியும் கலந்த ஒரு கலவையான மனநிலை ஒட்டிக்கொண்டது.

பொதுவாக மொழிபெயர்க்கப்படும் புத்தகங்ஙகளின் உயிர்ப்பு தன்மை நீர்த்துப் போகாமல் இருப்பது ஆசிரியரின் திறனில் உள்ளது. அந்த வகையில் ஆசிரியர் தன் பணியை நிறைவாக செய்துள்ளார்.

அமெரிக்க ராணுவ வீரர் டெர்ரி ஹோல்ட்ப்ருக்ஸுடன் நாமும் பயணம் செய்து குவாண்டனாமோ நிகழ்வுகளுக்கு சாட்சியாகியது போன்ற உணர்வு எழுவது தவிர்க்க முடியாதது.

இறுதியில் சிலருக்கு கிடைத்த விடியல் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என விரும்பிய "முஸ்தஃபா" போன்றே நம் மனமும் ஏங்குகின்றது.

நன்றி : பர்வின் பானு அனஸ்

No comments:

Post a Comment