Saturday 17 November 2018

தீரன் திப்புவே... - கவிதை

தீரன் திப்புவே...
நீ இன்றிருந்தால்
எங்களுக்கு எவ்வளவு
உதவியாக இருந்திருக்கும்!
நீ இன்றிருந்தால்
குஜராத்தில்
கர்ப்பிணிளைக்கூட
கருவைக் கிழித்து
நெருப்பில் எறிந்து
கரியாக்கினார்களே..
அது நடந்திருக்குமா?
நீ இன்றிருந்தால்
நெல்லிப் படுகொலைகளும்
பகல்பூர் படுகொலைகளும்
ஹாஷிம்புராவும்
நடந்திருக்குமா?
நீ இன்றிருந்தால்
ஃபாசிசத்தை வேரோடும்
வேரடி மண்ணோடும்
பிடுங்கி எறிந்திருப்பாயே...
நீ இன்றிருந்தால்
இந்த மனித குல எதிரிகளை
மண்ணில் போட்டு
மாய்த்திருப்பாயே...
அப்பேற்பட்ட ஆங்கிலேயர்களே
உன்னைக் கண்டு
குலை நடுங்கினார்களே...
இந்தப் படுபாவி ஃபாஸிஸ்டுகள்
எம்மாத்திரம் உனக்கு?
எங்களின் ஆதர்ஷ புருஷன் நீ...
எங்களின் எடுத்துக்காட்டு நீ.,..
எங்களின் முன்மாதிரி நீ...
நீ காட்டிய வழியிலேயே...
நீ அடைந்த வழியிலேயே...
நாங்களும் செல்ல
நாடுகிறோம்...
ஆம்...
உன் தீரத்தில் சிறிதளவேணும்
எங்களுக்குக் கிடைக்காதா
என்று ஏங்குகிறேம்...
அதற்காகவே
அல்லும் பகலும்
அயராதுழைக்கிறோம்...
உன்னைப் போன்று தீரர்களாக
உருவாவதற்கு உழைக்கிறோம்
ஒற்றுமையை விழைகிறோம்...
நீ விதைத்த வீரம்
எங்கள் நரம்புகளிலும்
மங்காது ஓடுகிறதென்று
இன்ஷா அல்லாஹ்
ஒரு நாள் நிரூபிப்போம்...
MSAH

No comments:

Post a Comment