Saturday 17 November 2018

நபிமார்களின் தேவை

ஒரு வாழ்க்கையைத்தான் இன்னொரு வாழ்க்கை பின்பற்றுகிறது. நம்மை ஈர்ப்பதற்கு நமக்கு உயிருள்ள மனிதர்கள் தேவைப்படுகிறார்கள்.
போராட்டங்கள் நிறைந்த அன்றாட வாழ்க்கையில் சரி எது, தவறு எது என்று சுட்டிக்காட்ட, நம்மிடம் முரண்பட, நம்மிடம் கேள்விகள் கேட்க, நமது கேள்விகளுக்கு பதிலளிக்க, தவறான புரிதல்களைத் திருத்த, நம் கரம் பற்றி அழைத்துச் செல்ல, நமக்கு முன்மாதிரியாக இருக்க உயிருள்ள மனிதர்கள் தேவைப்படுகிறார்கள்.
அதனால்தான் வேதங்களின் எண்ணிக்கையை விட இறைத்தூதர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. அதாவது, பல நபிமார்கள் புதிய இறைவேதம் வழங்கப்படாமல் அனுப்பப்பட்டிருக்கிறார்கள்.

No comments:

Post a Comment