Showing posts with label மீடியா உலகில் முஸ்லிம்கள். Show all posts
Showing posts with label மீடியா உலகில் முஸ்லிம்கள். Show all posts

Saturday, 17 January 2015

மீடியா உலகில் முஸ்லிம்கள் – 40

நாம் எவ்வகையிலாவது, எப்பாடு பட்டாவது பொது ஊடகத்தை உருவாக்க வேண்டும்.

ஏனெனில்…

“18ம் நூற்றாண்டில் யார் கைகளில் கடற்படை இருந்ததோ அவர்களுக்குத்தான் இந்த உலகம் சொந்தமாக இருந்தது. 19ம் நூற்றாண்டில் விமானப் படைகளை வைத்திருந்த நாடுகள்தான் உலகைத் தீர்மானிக்கும் சக்தியாகத் திகழ்ந்தன. ஆனால் 20ம் நூற்றாண்டில் உலக ஊடகங்களை எவர் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருகிறாரோ அவருக்கு உலக நாடுகள் எல்லாம் சொந்தமாகிவிடும்” என்கிறார் முன்னாள் மலேசியா பிரதமர் முஹம்மத் மகாதீர் அவர்கள்.

இன்று உலக ஊடகங்கள் அமெரிக்க ஸியோனிஸ்டுகளின் கையில் இருப்பதால் 20ம் நூற்றாண்டும், 21ம் நூற்றாண்டும் அமெரிக்க - யூத ஸியோனிஸ்டுகளின் இரும்புப் பிடிக்குள் உள்ளன.

ஸியோனிஸம் என்பது ஒரு யூதப் பரவலாக்க இயக்கம். உலகை யூதர்களின் நிழலில் இயக்க வேண்டும் என்று செயல்பட்டுக் கொண்டிருப்பவர்கள். எனவேதான் இஸ்ரேல் என்று தாங்கள் கையகப்படுத்திய நிலப்பரப்புடன் அவர்கள் நின்று விடாமல் அமெரிக்க, ஐரோப்பிய கண்டங்களை தங்களது ஆட்சி அதிகாரங்கள் மூலம் தங்கள் வசமாக்கி வைத்திருக்கிறார்கள்.

உலகம் முழுவதும் ஒரே ஏகாதிபத்திய யூத ஆட்சி வரவேண்டும் என்பதுதான் அவர்களது இலக்கு. அந்தத் திட்டத்துடன் பூமிப் பந்தின் அனைத்து சந்து பொந்துகளிலும் அவர்களின் எல்லைகளை விரித்து வருகிறார்கள்.

ஊடகங்களில் யூதர்களின் மிருக பலத்தை உறுதிப்படுத்தும் ஒரு சிறிய உரையாடல் இதோ:

கிரஹாம்: ஊடகங்களின் மீதான யூதர்களின் ஆளுமையை நாம் தடுத்து நிறுத்த வேண்டும். இல்லையென்றால் அது அமெரிக்காவை அழிவிற்கு இழுத்துச் செல்லும்.

அமெரிக்க அதிபர் நிக்ஸன்: நீங்கள் அதை நம்புகிறீர்களா?

கிரஹாம்: ஆம். நான் அதை உறுதியாக நம்புகிறேன்.

அமெரிக்க அதிபர் நிக்ஸன்: ஆம். நானும் அதை நம்புகிறேன். ஆனால் அதை நான் ஒரு போதும் வெளியில் சொல்ல முடியாது.

‍மதத் தலைவர் பில்லி கிரஹாமும் (Billy Graham), அமெரிக்க முன்னாள் அதிபர் ரிச்சர்ட் நிக்ஸனும் (Richard Nixon) தொலைபேசியில் பேசிய பேச்சின் ஒலி நாடாப் பதிவுதான் இது.

இன்றைக்கு இந்த எச்சரிக்கை எல்லையைக் கடந்து அமெரிக்கா தனது முழு ஆளுமையையும் யூதர்களின் இரும்புப் பிடிக்குள் இழந்து ஸியோனிஸ்டுகளின் அமெரிக்காவாகி விட்டது.

உலகின் தலைசிறந்த மின்னணு செய்தி ஊடகங்களும், அச்சுச் செய்தி ஊடகங்களும்,  உலக சினிமாக்களின் தலைநகரமான ஹாலிவுட்டும் அமெரிக்க ஸியோனிஸ்டுகளால் நிர்வகிக்கப்படுகின்றன. திரைப்படங்களின் மூலமாகவும், செய்தி நிறுவனங்களின் மூலமாகவும் முஸ்லிம்களுக்கெதிரான கருத்துப் போர்கள் நடந்துகொண்டிருக்கின்றன.

ஹாலிவுட்டின் தலைசிறந்த திரைப்பட நிறுவனமான வால்ட் டிஸ்னி (Walt Disney), இன்னும் பல செய்தி, விளையாட்டு தொலைக்காட்சிகள், திரைப்பட நிறுவனங்களையும் நிர்வகிப்பது மைக்கேல் ஈஸ்னர் (Michael Eisner) என்ற ஸியோனிஸ்ட் யூதர்தான். குழந்தைகளுக்கான கார்ட்டூன்களிலும், கேளிக்கைப் படங்களிலும் ஸியோனிஸக் கருத்துத் திணிப்புகளை உருவாக்குகிறார்கள்.

தற்பொழுது அதி நவீன கிராஃபிக்ஸ் தொழில் நுட்பத்துடன் வீடியோ கேம்கள், 3D கற்பனை உலகப் படங்கள், மின்னணு விளையாட்டு ஊடகங்கள் போன்றவற்றின் மூலமும் இளைஞர்களிடயே வன்முறையையும், கொடிய பாலுணர்வுக் கிளர்ச்சிகளையும் தூண்டி நிரந்தர மன போதையாளர்களாய் ஆக்கி விட முயற்சிகள் நடைபெறுகின்றன. இவர்களின் பிரம்மாண்ட நிறுவனங்கள் உலகம் முழுவதும் பரவி உள்ளன‌.

ஹாலிவுட்டின் முன்னணி திரைப்பட இயக்குனர் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் (Steven Spielberg) ஒரு ஸியோனிஸ்ட் யூதர். டேவிட் கெஃப்பன் (David Geffen), ஜெஃப்ரி கேட்ஸன்பர்க் (Jeffrey Katzenberg) - இவர்கள் எல்லோரும் திரைப்படத் துறையைச் சார்ந்த யூத பிரபலங்கள்.

பிரமாண்டங்களுக்குப் பெயர் போன இவர்களின் திரைப்படங்கள் அனைத்தும் யூத ஸியோனிஸக் கருத்துக்களை மையமாகக் கொண்டே எடுக்கப்படுகின்றன. உலகின் நான்காவது பெரிய செய்தி ஊடக நிறுவன குழுமம் எட்ஜர் பிரான்மன் (Edgar Bronfman) என்ற யூதரின் பிடியில் உள்ளது.

அமெரிக்காவின் முன்னணிப் பத்திரிகையான The New York Post பீட்டர் காலிகவ் (Peter Kalikow) என்பவரால் நடத்தப்படுகிறது. முஸ்லிம்களுக்கெதிரான நிகழ்ச்சிகளை நடத்தும் சிறந்த ரேடியோ நிகழ்ச்சியாளர் ஹோவார் ஸ்டெம். இவரின் நிகழ்ச்சிகள் அமெரிக்காவில் மிகப் பிரபலமானவை.

அமெரிக்கன் ஃபிலிம் மேகசின் கணக்கெடுப்பின்படி உலகின் தலைசிறந்த பத்து திரைப்பட நிறுவனங்களில் முதல் 8 திரைப்பட நிறுவனங்கள் யூதர்களுக்குச் சொந்தமானது. 

பத்து ஆண்டுகளில் வெளிவந்த 1000 ஹாலிவுட் திரைப்படங்களில் 90% சதவீதம் முஸ்லிம்களையும், கம்யூனிஸ்டுகளையும் தீவிரவாதிகளாகவும், அவர்களின் நாடுகளை பயங்கரவாதங்களின் உற்பத்தித் தலமாகவும் காட்டியுள்ளன. இந்தத் திரைப்பட ஊடகங்கள் கொடூரமான எண்ண அலைகளை மக்களிடம் உண்டு பண்ணியிருக்கின்றன. முஸ்லிம்களுக்கெதிரான, கம்யூனிசத்திற்கெதிரான வெறுப்பு அரசியலை ஊடகங்களின் மூலம் பரப்புகிறார்கள் அமெரிக்க ஸியோனிஸ்டுகள்.

இவர்கள் நூல் வெளியீட்டு நிறுவனங்களையும் விட்டு வைக்கவில்லை. தலைசிறந்த எல்லா பதிப்பகங்களும் யூதர்களுடையவை. ரேண்டம் ஹவுஸ், சைமன் & ஷுஸ்டர், டைம் ஆகியவை அவற்றில் சில. இதில் வெஸ்டர்ன் பப்ளிஷிங் (Western Publishing) நிறுவனம்தான் உலகிலேயே குழந்தைகளுக்கான சிறந்த புத்தகப் பதிப்பகமாக விளங்குகிறது.

இந்த யூதப் பதிப்பாளர்கள் இஸ்லாமையும், முஸ்லிம்களையும், அவர்களது கலாச்சாரங்களையும், பண்பாடுகளையும் மிகக் கேவலமான வடிவில் சித்தரிக்கிறார்கள். மேலும் ஸியோனிஸக் கருத்துத் திணிப்புகளையும், ஃபாசிச சிந்தனைகளையும் தேசபக்தி போன்ற கருத்து மாற்றங்களுடன் சிறு குழந்தைகளின் மனங்களில் நச்சு விதைககளாக விதைக்கிறார்கள்.

ஆக, இத்தகைய கொடூர யூத மிருகப் பிடியிலிருந்து ஊடகங்களைக் காக்கவும், இந்திய ஃபாசிச சிந்தனை ஊடுருவியிருக்கும் ஊடகத்தின் களங்கத்தைத் துடைத்தெறியவும் முஸ்லிம்கள் முன்வரவேண்டும். ஊடகங்களில் தங்கள் முழு கவனத்தையும் செலுத்த வேண்டும்.

பணம் படைத்தவர்கள் பத்திரிகைகளை ஆரம்பிப்பது குறித்து சிந்திக்க வேண்டும். அறிவுஜீவிகளும், சிந்தனையாளர்களும் தங்கள் அறிவையும், அனுபவத்தையும் ஊடகத்தின்பால் திருப்ப வேண்டும்.

“இந்தியா நெக்ஸ்ட்” என்ற ஹிந்தி மாதமிரு இதழ் இன்று முஸ்லிம்களால் துவங்கப்பட்டு வெற்றிகரமாக நடத்தப்பட்டு வருகின்றது. இது ஊடக உலகில் நமக்கு நம்பிக்கையைத் தருகின்றது.

தலைமுறை தலைமுறையாக நாம் ஏங்கி தாங்கி வந்த நமது ஊடகக் கனவை நம் தலைமுறையில் நடப்பாக்கிக் காட்டுவோம். வெற்றி பெறுவோம் இன்ஷா அல்லாஹ்.

மீடியா உலகில் முஸ்லிம்கள் – 39

சமீபத்தில் நமது தேசத்தின் தலைநகராம் புது தில்லியில் சில முஸ்லிம் அறிவுஜீவிகள், ஊடகவியலாளர்கள், கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள் ஒன்று கூடினர். எட்டு மாநிலங்களிலிருந்து கலந்துகொண்ட இவர்களின் ஒரே நிகழ்ச்சித் திட்டம் : “ஆங்கில ஊடகத்தின் அவசியமும், முக்கியத்துவமும்”.

அந்தக் கூட்டத்தின் இறுதியில் அவர்கள் அனைவரும் ஏகோபித்த ஒரு கருத்தில் ஊன்றி நின்றனர். முஸ்லிம்களுக்குச் சொந்தமாக ஓர் ஆங்கில ஊடகம் அவசர, அவசியமாக துவங்கப்பட வேண்டும் என்பதே அந்த ஏகோபித்த கருத்து.

இந்திய அளவிலும், உலக அளவிலும் ஆட்சியாளர்களுக்கும், சமூகத்திற்கும் நம் சமுதாயத்தின் குரல் போய்ச் சேர வேண்டும் என்றால் அதற்கு ஆங்கில ஊடகம் அவசியம் இருக்க வேண்டும் என்ற கருத்து அங்கே அறுதி வரை நிலவியது.  இந்தக் கூட்டத்திற்கு உயிர் மூச்சாய் இருந்து ஏற்பாடு செய்த ஆந்திராவைச் சேர்ந்த ஒரு தொழிலதிபர் 2014ல் இன்ஷா அல்லாஹ் ஓர் ஆங்கில நாளிதழ் ஆரம்பிக்கப்படும் என்று கூட்டத்தில் உறுதியளித்தார்.

கூட்டத்தில் நடந்த கலந்துரையாடலில் கலந்துகொண்ட மேற்கு வங்காளத்தைச் சார்ந்த உமர் கான் இவ்வாறு கூறினார்: “இந்தியாவிலும், உலகிலும் மூலை முடுக்கெங்கிலும் நமது குரல் கேட்க வேண்டும் என்றால் நமக்கு ஆங்கில ஊடகம் அவசியம். இன்று ஆங்கில ஊடகம் முஸ்லிம்கள் குறித்த தவறான கருத்துகளைப் பரப்பி வருகின்றது. முஸ்லிம்களிடம் ஆங்கில ஊடகம் இல்லாததால் இவற்றிற்கு தகுந்த பதிலை நம்மால் கூற முடியவில்லை.”

மத்திய பிரதேச மாநில எஸ்.டி.பி.ஐ. தலைவர் வழக்கறிஞர் ஸஜ்ஜாத் அந்தக் கலந்துரையாடலில் இவ்வாறு கூறினார்: “அமைச்சர்களுக்கு, ஆட்சியாளர்களுக்கு, தலைவர்களுக்கு நமது செய்திகளை எடுத்தியம்புவதற்கு நம்மிடம் தகுந்த ஊடகம் இல்லை. எனவே அரசியலில் குதிப்பதற்கு முன்னால் நாம் ஊடகத்தில் கால் பதிக்க வேண்டும். ஏனெனில் ஊடகம் இல்லையெனில் நாம் அரசியலில் வெற்றி பெற முடியாது.”

உர்து பத்திரிகையாளரும், கட்டுரையாளருமான ஆபித் அன்வர் தனது துவக்க உரையில் இவ்வாறு கூறினார்: “இன்று ஊடகம் அனைத்துத் துறைகளிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. ஆதலால் அதன் முக்கியத்துவம் இன்று பன்மடங்காக உயர்ந்துள்ளது.”

இந்தக் கூட்டத்தின் ஒருங்கிணைப்பாளர் ஷேக் அப்துர் ரஹ்மான் ஓர் ஆங்கில நாளிதழைக் கொண்டு வரவேண்டும் என்ற கனவைக் கொண்டவர். “கடந்த காலத்தில் ஆங்கில நாளிதழ் துவங்குவதற்கு பல முயற்சிகள் எடுக்கப்பட்டன. ஆனால் அந்த முயற்சிகள் எடுபடவில்லை. அந்தக் கனவு நனவாகவில்லை. இன்ஷா அல்லாஹ் 2014க்கு முன்பாக ஓர் ஆங்கில நாளிதழ் துவங்கப்படும்” என்று அவர் கூறினார்.

நாமும் அந்த நன்னாளுக்காகக் காத்திருப்போம். அவர்களின் கனவுப்படி ஓர் ஆங்கில நாளிதழ் உருவாகட்டும். அல்லாஹ் அதற்கு உதவி புரிவானாக.

மீடியா உலகில் முஸ்லிம்கள் – 38

முஸ்லிம் ஆங்கில ஊடகத்திற்கு நிறைய பொறுப்புகள் உணடு. நவீன, படித்த முஸ்லிமல்லாத இந்தியர்களுக்கு அது நிறைய சொல்ல வேண்டியுள்ளது. முஸ்லிம்களும் அவர்களைப்போல்தான் நாட்டின் வளர்ச்சியில் ஆர்வம் உள்ளவர்கள் என்பதை அவர்களுக்கு உணர்த்தவேண்டும். இந்தியாவை இருபத்தொன்றாம் நூற்றாண்டிற்கு வெற்றிகரமாக அழைத்துச் செல்வதில் முஸ்லிம்களும் முக்கிய பங்கு வகிக்கிறார்கள் என்பதை அவர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.

முஸ்லிம் அறிவுஜீவிகளும், செல்வந்தர்களும் இந்த முஸ்லிம் ஆங்கில ஊடகத்தை ஊக்குவிக்க வேண்டும். மானசீகமான அனைத்து ஆதரவுகளுடன் பொருளாதார ஆதரவுக் கரத்தையும் நீட்ட வேண்டும். இல்லையென்றால் இவற்றிற்கும் கடந்த கால முஸ்லிம் பத்திரிகைகளுக்கு ஏற்பட்ட நிலையே ஏற்படும்.

இதனைத் தவிர்க்க யுனைட்டெட் மீடியா நிறுவனர் தவுலத் கான் அவர்கள் ஒரு தடவை மீடியாவின் முக்கியத்துவம் குறித்து நடத்திய உரையை நாம் கவனத்திற்கொள்ளலாம். அவரது உரையின் துளிகள் வருமாறு:

* தனி மனிதனும் சரி, ஒரு சமுகமும் சரி ஆளுமை மிக்கவர்களாக ஆவதற்கு ஊடகம் அவசியம்.


* ஊடகத்துறை பற்றி நமது சமுதாயத்திற்கு விழிப்புணர்வு இல்லை. மாறாக எதிர் கருத்தே நிலவுகிறது. அந்த நிலை மாற்றபடவேண்டும்.


* ஊடகம் என்றால் தகவல்களையும் கருத்துக்களையும் மக்களிடம் கொண்டு போய் சேர்ப்பித்து, மக்கள் கருத்தை உருவாக்குவது.


* அச்சு, வானொலி, தொலைக்காட்சியைத் தொடர்ந்து டிஜிட்டல் மிடியா என்ற இணைய ஊடகம் வந்துவிட்டது. இது இந்த நூற்றாண்டின் மிகப் பெரும் தொழிற்புரட்சியாகும்.


* இணைய ஊடகம் வழியாக வாசகர்கள் தங்களது கருத்துக்களையும் முன்வைப்பார்கள்.


* ஒரு ஊடகத்தை நாம் அடையாளம் காண்டு கொள்ளவேண்டும்.அது செய்தி நிறுவனம் உள்ளிட்ட எந்த ஊடகமாகட்டும்.



*செய்தி கிடைக்கப் பெற்ற மூலத்தை நாம் தெரிந்து கொள்ளவேண்டும்.

* பிழையான, ஆதாரமற்ற செய்திகளைப் பரப்பும் ஊடகத்தை சமூகம் புறக்கணிப்பு செய்யும்போது அவர்கள் தங்களை திருத்திக் கொள்ள வாய்ப்புள்ளது.


* ஊடகத்தில் பணியாற்றுபவர் சமூகத்திற்கு ஆதரவாக இருப்பார்  எனவே நாமும் ஊடகத்துறையில் நுழைய வேண்டும்.


* ஊடக நிறுவனம் அரசியல், அறிவியல், நிதி, விளையாட்டு உள்ளிட்ட எல்லா துறை எழுத்தாற்றல் மிக்கவர்களையும் வரவேற்கிறது. நாம் எந்தத் துறை சார்ந்து படிந்திருந்த போதும் ஊடகத்தில் பணியாற்ற முடியும். ஏன், உங்களின் துறை வேலைகளைக் கவனித்துக்கொண்டே, இல்லத்தில் இருந்துகொண்டே கூட பங்களிப்பு செய்ய முடியும்.


* ஊடகத்தில் நுழைய பேச்சாற்றல், எழுத்தாற்றல் முக்கியமானது. இந்த ஆற்றல் பெற வாசிப்பு பழக்கம் வேண்டும். குறிப்பாக இலக்கிய நூல்கள், பத்திரிக்கைகள் தொடர்ந்து படிக்க வேண்டும்.சரளமாக பேசவும் கற்றுக்கொள்ளவேண்டும்.சொற்களைச் சரியாகப் பயன்படுத்த வேண்டும்.


* இதழியல் படிப்பு 3, 6 மாதங்கள் 1,2,3 வருடங்கள் என்று உள்ளது. நீங்கள் கல்லுரியில் படித்துக்கொண்டோ, வேலை செய்துகொண்டோ இதழியல் படிக்க முடியும்! இதர துறை படிப்புகளுடன் இதழியலும் படித்து உங்கள் தகுதியை வளர்த்துக்கொள்ளுங்கள்.

இவ்வாறு ஊடகத்தின் முக்கியத்துவம் அறிந்து நாம் செயல்பட்டால் உள்ளபடியே வெற்றி பெறலாம் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.